மத்திய அரசின் போக்குவரத்து கட்டண உயர்வை கண்டித்து அனைத்து ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டம்


மத்தியில் ஆளும் பா.ஜா.க அரசு போக்குவரத்து அலுவலகங்களில் புதிய கட்டணங்களை பல மடங்காக உயர்தியுள்ளது. ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க பழைய கட்டணம் 300 ரூபாயாக இருந்ததை தற்போது 640 ஆகவும் எப்.சி கட்டணத்தை ரூ.225 இருந்து ரூ.625 ஆகவும், லேட் எப்.சி அபராதம் 60 நாட்கள் வரை ரூ.100 ஆக இருந்ததை ரூ.3000 என பல்வேறு கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளது.



மத்திய அரசின் இந்த முடிவை மற்ற மாநிலங்கள் இதுவரை அமல்படுத்தாத நிலையில் தமிழக அரசு அமல்படுத்தி அபராதங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக கூறி கோவை மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டம் செய்தனர்.



கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலம் முன்பு 150ற்க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர் தங்களது வாகனத்தை நீண்ட வரிசையில் நிறுத்தி இந்த கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்ட்த்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அனைத்து ஆட்டோ ஓட்டுநர் கமிட்டி ஒருங்கினைபாளர் மற்றும் சி.ஐ.டியு தலைவர் சுகுமாறன் கூறும்போது:

தற்போது இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் பல பேர் வாடகை ஆட்டோ ஓட்டுபவர்கள் என்றும் சொந்தமாக ஆட்டோ வைத்திருப்பவர்கள் வங்கிகளில் கடன் பெற்று அதனை செலுத்த முடியாமல் வாழ்வாதாரதிற்கே சிரமபட்டு வரும் நிலையில் மத்திய அரசு பெரும் முதலாளிகளிடம் இத்தொழிலை ஒப்படைக்கும் நோக்கில் இந்த கட்டண உயர்வை கொண்டு வந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

இக்கட்டண உயர்வை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்டோ தொழிற்சங்களை இணைத்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.

Newsletter

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...