மத்திய அரசின் போக்குவரத்து கட்டண உயர்வை கண்டித்து அனைத்து ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டம்


மத்தியில் ஆளும் பா.ஜா.க அரசு போக்குவரத்து அலுவலகங்களில் புதிய கட்டணங்களை பல மடங்காக உயர்தியுள்ளது. ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க பழைய கட்டணம் 300 ரூபாயாக இருந்ததை தற்போது 640 ஆகவும் எப்.சி கட்டணத்தை ரூ.225 இருந்து ரூ.625 ஆகவும், லேட் எப்.சி அபராதம் 60 நாட்கள் வரை ரூ.100 ஆக இருந்ததை ரூ.3000 என பல்வேறு கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளது.



மத்திய அரசின் இந்த முடிவை மற்ற மாநிலங்கள் இதுவரை அமல்படுத்தாத நிலையில் தமிழக அரசு அமல்படுத்தி அபராதங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக கூறி கோவை மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டம் செய்தனர்.



கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலம் முன்பு 150ற்க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர் தங்களது வாகனத்தை நீண்ட வரிசையில் நிறுத்தி இந்த கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்ட்த்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அனைத்து ஆட்டோ ஓட்டுநர் கமிட்டி ஒருங்கினைபாளர் மற்றும் சி.ஐ.டியு தலைவர் சுகுமாறன் கூறும்போது:

தற்போது இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் பல பேர் வாடகை ஆட்டோ ஓட்டுபவர்கள் என்றும் சொந்தமாக ஆட்டோ வைத்திருப்பவர்கள் வங்கிகளில் கடன் பெற்று அதனை செலுத்த முடியாமல் வாழ்வாதாரதிற்கே சிரமபட்டு வரும் நிலையில் மத்திய அரசு பெரும் முதலாளிகளிடம் இத்தொழிலை ஒப்படைக்கும் நோக்கில் இந்த கட்டண உயர்வை கொண்டு வந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

இக்கட்டண உயர்வை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்டோ தொழிற்சங்களை இணைத்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...