மத்திய அரசின் போக்குவரத்து கட்டண உயர்வை கண்டித்து அனைத்து ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டம்


மத்தியில் ஆளும் பா.ஜா.க அரசு போக்குவரத்து அலுவலகங்களில் புதிய கட்டணங்களை பல மடங்காக உயர்தியுள்ளது. ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க பழைய கட்டணம் 300 ரூபாயாக இருந்ததை தற்போது 640 ஆகவும் எப்.சி கட்டணத்தை ரூ.225 இருந்து ரூ.625 ஆகவும், லேட் எப்.சி அபராதம் 60 நாட்கள் வரை ரூ.100 ஆக இருந்ததை ரூ.3000 என பல்வேறு கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளது.



மத்திய அரசின் இந்த முடிவை மற்ற மாநிலங்கள் இதுவரை அமல்படுத்தாத நிலையில் தமிழக அரசு அமல்படுத்தி அபராதங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக கூறி கோவை மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டம் செய்தனர்.



கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலம் முன்பு 150ற்க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர் தங்களது வாகனத்தை நீண்ட வரிசையில் நிறுத்தி இந்த கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்ட்த்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அனைத்து ஆட்டோ ஓட்டுநர் கமிட்டி ஒருங்கினைபாளர் மற்றும் சி.ஐ.டியு தலைவர் சுகுமாறன் கூறும்போது:

தற்போது இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் பல பேர் வாடகை ஆட்டோ ஓட்டுபவர்கள் என்றும் சொந்தமாக ஆட்டோ வைத்திருப்பவர்கள் வங்கிகளில் கடன் பெற்று அதனை செலுத்த முடியாமல் வாழ்வாதாரதிற்கே சிரமபட்டு வரும் நிலையில் மத்திய அரசு பெரும் முதலாளிகளிடம் இத்தொழிலை ஒப்படைக்கும் நோக்கில் இந்த கட்டண உயர்வை கொண்டு வந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

இக்கட்டண உயர்வை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்டோ தொழிற்சங்களை இணைத்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.

Newsletter

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...