கோவையில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து ரூ.2 லட்சம் பணம், தங்க மோதிரம் திருட்டு - போலீசார் விசாரணை…!

மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து நோயாளியின் பணத்தை எடுத்துவிட்டு வெளியே சென்றது தெரியவந்தது.


கோவை: கோவை சாய்பாபா காலணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குள் புகுந்துநோயாளியின் ரூ.2 லட்சம் பணம் மற்றும் தங்க மோதிரத்தை மர்ம நபர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கோவைப்புதூர் இ.பி காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் இவரது மகன் ராஜேஷ் சுப்பிரமணியம் (43). இவர் கத்தார் நாட்டில் விமானியாக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு முதுகு தண்டுவட பிரச்சனை காரணமாக தற்போது கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி ராஜேஷ் சுப்பிரமணியத்துக்கு அறுவை சிகிச்சை நடந்ததாகத் தெரிகிறது.

அப்போது அவரது அறையிலிருந்து அறுவை சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவரது அறைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் உள்ளே வைத்திருந்த ரூ 2 லட்சம் பணம் மற்றும் தங்க மோதிரங்களைத் திருடித் தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து அவரது உறவினர்கள் வந்து பார்த்தபோது பணம் மற்றும் நகை மாயமானது தெரியவந்தது. பின்னர் மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து பணத்தை எடுத்துவிட்டு வெளியே சென்றது தெரியவந்தது.



இதையடுத்து ராஜேஷ் சுப்பிரமணியம் சாய்பாபா காலணி போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில்வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...