கோவையில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து ரூ.2 லட்சம் பணம், தங்க மோதிரம் திருட்டு - போலீசார் விசாரணை…!

மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து நோயாளியின் பணத்தை எடுத்துவிட்டு வெளியே சென்றது தெரியவந்தது.


கோவை: கோவை சாய்பாபா காலணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குள் புகுந்துநோயாளியின் ரூ.2 லட்சம் பணம் மற்றும் தங்க மோதிரத்தை மர்ம நபர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கோவைப்புதூர் இ.பி காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் இவரது மகன் ராஜேஷ் சுப்பிரமணியம் (43). இவர் கத்தார் நாட்டில் விமானியாக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு முதுகு தண்டுவட பிரச்சனை காரணமாக தற்போது கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி ராஜேஷ் சுப்பிரமணியத்துக்கு அறுவை சிகிச்சை நடந்ததாகத் தெரிகிறது.

அப்போது அவரது அறையிலிருந்து அறுவை சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவரது அறைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் உள்ளே வைத்திருந்த ரூ 2 லட்சம் பணம் மற்றும் தங்க மோதிரங்களைத் திருடித் தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து அவரது உறவினர்கள் வந்து பார்த்தபோது பணம் மற்றும் நகை மாயமானது தெரியவந்தது. பின்னர் மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து பணத்தை எடுத்துவிட்டு வெளியே சென்றது தெரியவந்தது.



இதையடுத்து ராஜேஷ் சுப்பிரமணியம் சாய்பாபா காலணி போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில்வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...