சென்னை- சேலம் பயண நேர குறைப்பு சாலை வழித்தடத்தில் உள்ள பொது மக்களிடம் கருத்துக் கேட்காமல் தமிழக அரசு இந்த திட்டத்தைச் செயல்படுத்தாது என தெரிவித்தார்.
கோவை: கோவை அன்னூர் அடுத்தடுத்த காட்டம்பட்டி குளக்கரை பகுதியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், இளைஞர்கள் ஒத்துழைப்புடன் புனரமைக்கப்பட்டு மியாவாக்கி முறையில் அடர்வனம் அமைக்க மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வேங்கை, நாவல், கருவாச்சி உள்ளிட்ட 35 வகையான 3000 மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில் திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மரம் நடும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். இதில் கல்வேட்டையும் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தமிழகத்தில் 33 சதவிகித நிலப்பரப்பை வனப் பகுதியாக மாற்றும் முயற்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஈடுபட்டுள்ளதாகவும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
சென்னை- சேலம் பயண நேர குறைப்பு சாலை வழித்தடத்தில் உள்ள பொது மக்களிடம் கருத்துக் கேட்காமல் தமிழக அரசு இந்த திட்டத்தைச் செயல்படுத்தாது என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திரைப்பட இயக்குநர் செளந்தரராஜன் உட்படப் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.