ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குளிர்ச்சி நிறைந்த கோவை குற்றாலத்திற்குச் வரும் சுற்றுலாப் பயணிகளின் அதிகரித்துள்ளது.
கோவை: கோடை வெயிலின் தாக்கத்தால் கோவை குற்றாலத்தில் குளிப்பதற்காகச் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
கோவையை அடுத்த சாடிவயல் மலைப்பகுதியில் கோவை குற்றால அருவி அமைந்துள்ளது. குளிர்ச்சி நிறைந்த இந்த அருவியில் குளிப்பதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
தற்போது கோடைக் காலம் நிலவி வருவதால் தமிழகத்தில் இயல்பை விட வெயில் கூடுதலாகக் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குளிர்ச்சி நிறைந்த கோவை குற்றாலத்திற்குச் வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
தங்களது குடும்பத்துடன் வரும் சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் விழும் அருவியில் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.