'ஆட்டிசம்' -மனநோய் அல்ல, மன அழுத்தம் மட்டுமே.. கோவையில் உலக ஆட்டிச தின விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

ஆட்டிசம் என்பது மனநோய் அல்ல, மன அழுத்தம் மட்டுமே, ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் முற்றிலும் குணப்படுத்தலாம் என விழிப்புணர்வு நடைபயண நிகழ்ச்சியில் மருத்துவர்கள் தெரிவித்தனர்.


கோவை: உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு, இந்தியக் குழந்தைகள் மருத்துவ அகாடமி(IAP) மற்றும் இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமி தமிழ்நாடு கிளை(TNSC) சார்பில், விழிப்புணர்வு நடைப்பயண நிகழ்ச்சி ரேஸ்கோர்ஸ் மாசாணிக் குழந்தைகள் மருத்துவமனை வளாகத்தில் இன்று காலை நடந்தது.



இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமி தமிழ்நாடு கிளை செயலாளர், டாக்டர் கே. ராஜேந்திரன் தலைமை வகித்து விழிப்புணர்வு நடைப்பயணத்தைத் துவக்கி வைத்தார்.

இந்தியக் குழந்தைகள் மருத்துவ அகாடமி, தமிழ்நாடு கிளை, தலைவர், டாக்டர். ஜெயவர்தனா கூறியதாவது:-

ஆட்டிசம் என்பது குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. அதை அதிகரிக்கவே இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். ஆட்டிசம் என்பது மன நோய் அல்ல, மன அழுத்தம் மட்டுமே.

ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் அந்த குழந்தைகளை முற்றிலும் குணப்படுத்த முடியும். குறிப்பாக ஒன்றரை வயது முதல் இரண்டரை வயதுக்குள் குழந்தைகளின் நடவடிக்கைகளை வைத்து ஆட்டிசம் பாதிப்பு உள்ளதா என்பதைப் பெற்றோர்கள் கண்டறியலாம்.

அவ்வாறு இருக்கும் பட்சத்தில் தாமதமின்றி உடனடியாக மருத்துவர்களை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் அந்த குழந்தை விரைவில் அந்த பாதிப்பிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும்.

பெரும்பாலான பெற்றோர் மூன்று அல்லது நான்கு வயதை கடந்த பின்னர் ஆட்டிசம் சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்களை அணுகி வருகின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு காரணமாகும்.

எங்கள் அகடமி சார்பில் இன்று ஒரு நாள் மட்டுமின்றி தொடர்ந்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மக்களும் தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் உடனடியாக மருத்துவர்களை அணுகி கேட்டு தெளிவு பெறலாம், தேவைப்படும் பட்சத்தில் சிகிச்சையும் உடனடியாக துவங்கலாம்.

இவ்வாறு டாக்டர் ஜெயவர்த்தனா தெரிவித்தார்.

இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமி, தமிழ்நாடு கிளை, செயலாளர் டாக்டர். பவுசாமோல், பொருளாளர் டாக்டர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.



Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...