கோவை கிணத்துக்கடவு அருகே கஞ்சா விற்பனை செய்த வடமாநில தொழிலாளி கைது - 950 கிராம் கஞ்சா பறிமுதல்..!

இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு வடபுதூர் சாலையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில தொழிலாளி கைது செய்து 950 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் நேற்று இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, வடபுதூர் சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த நபரைப் பிடித்து அவர் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.



இதையடுத்து, அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சஞ்ஜீப்குமாரபுகாரி (30) என்பதும், இவர் கோவை சூலூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருவதும் மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து கிணத்துக்கடவு பகுதியில் விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து, 950 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் சஞ்ஜீப்குமாரபுகாரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...