இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு வடபுதூர் சாலையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில தொழிலாளி கைது செய்து 950 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் நேற்று இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, வடபுதூர் சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த நபரைப் பிடித்து அவர் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சஞ்ஜீப்குமாரபுகாரி (30) என்பதும், இவர் கோவை சூலூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருவதும் மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து கிணத்துக்கடவு பகுதியில் விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து, 950 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் சஞ்ஜீப்குமாரபுகாரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் நேற்று இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, வடபுதூர் சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த நபரைப் பிடித்து அவர் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சஞ்ஜீப்குமாரபுகாரி (30) என்பதும், இவர் கோவை சூலூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருவதும் மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து கிணத்துக்கடவு பகுதியில் விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து, 950 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் சஞ்ஜீப்குமாரபுகாரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.