கோவை அரசு மருத்துவமனையில் ஆட்டிசம் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் உள்ள மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவைகள் மையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் ஆட்டிசம் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஏப்ரல் 2ம் தேதி உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவைகள் மையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆட்டிசம் நிலைப்பாடு உள்ள குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.



மருத்துவமனை முதல்வர் நிர்மலா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 3 வயதிற்குள்ளாக குழந்தைகளிடம் காணப்படும் செயல்பாடுகளை கண்டறிந்து உரிய பரிசோதனைகள் மூலம் ஆட்டிசம் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிந்து, துவக்க நிலையிலேயே உரிய பயிற்சிகளை வழங்கினால், வழக்கமான வாழ்க்கைக்கு குழந்தைகளை பயிற்றுவிக்க முடியும் என எடுத்துக் கூறப்பட்டது.

மேலும், பெற்றோர்களின் அனுபவங்கள் மற்றும் பயிற்சி பெற்று வரும் ஆட்டிசம் குழந்தைகளின் செயல்திறனை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, குழந்தைகள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தெரபிஸ்டுகள் எனப்படும் பயிற்றுநர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோர்களுக்கு, ஆட்டிசம் பாதிப்பு என்பது நோயல்ல என்பது குறித்தும், பாதிப்பு கண்டறியப்பட்டால், அக்குழந்தைகளை ஒதுக்காமல், வழக்கமான அன்புடன், கூடுதல் கவனிப்பையும் வழங்க வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டது.

உலகில் 44 குழந்தைகளில் ஒருவருக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாகவும், ஆட்டிசம் பாதிப்புள்ள நான்கு குழந்தைகளில் 3 பேர் ஆண் குழந்தைகள் என்பது சமீபத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...