இதுகுறித்து கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் புதிய வீடுகள் கட்டுவது தொடர்பாக, அடுக்கு மாடி குடியிருப்போர் சங்க நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
கோவை: கோவையில் சிதிலமடைந்து வரும் அடுக்குமாடி குடியிருப்புகளால் ஆபத்து ஏற்படுவதற்கு முன்பு தரமாக புதுப்பிக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாநகராட்சி, 52-வது வார்டு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சவுரிபாளையம் ஹட்கோ அடுக்குமாடி குடியிருப்பில் 528-குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.
அதனைச் சரிசெய்வதற்காகத் தொடர்ந்து மக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், அவற்றை இடித்து விட்டு, புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது சம்பந்தமாக ஏற்கனவே தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் வருகை தந்து, இதுகுறித்து ஆய்வு செய்தார்.
இதுகுறித்து, தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜியிடமும் சவுரிபாளையம் அடுக்குமாடி உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சவுரிபாளையம் ஹட்கோ அடுக்குமாடி உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் சங்க நிர்வாகிகளுடன் (பி.எஸ்.ஜி.ஹட்கோ) கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் புதிய வீடுகள் கட்டுவது குறித்து அடுக்கு மாடி குடியிருப்போர் சங்க நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி, 52-வது வார்டு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சவுரிபாளையம் ஹட்கோ அடுக்குமாடி குடியிருப்பில் 528-குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.
அதனைச் சரிசெய்வதற்காகத் தொடர்ந்து மக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், அவற்றை இடித்து விட்டு, புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது சம்பந்தமாக ஏற்கனவே தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் வருகை தந்து, இதுகுறித்து ஆய்வு செய்தார்.
இதுகுறித்து, தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜியிடமும் சவுரிபாளையம் அடுக்குமாடி உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சவுரிபாளையம் ஹட்கோ அடுக்குமாடி உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் சங்க நிர்வாகிகளுடன் (பி.எஸ்.ஜி.ஹட்கோ) கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் புதிய வீடுகள் கட்டுவது குறித்து அடுக்கு மாடி குடியிருப்போர் சங்க நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.