கோவையில் ரூ.1-கோடி கடன் தருவதாக கூறி, ரூ.25-லட்சம் மோசடி - இருவர் கைது..!

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி பணத்துடன் மாயமான இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து 6-லட்சம் ரூபாயைப் பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவையில் ஒரு கோடி ரூபாய் கடன் தருவதாகக் கூறி ரூ.10-லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்து பறித்து சென்ற இருவரை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதேவி, டிரை புரூட்ஸ் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். தொழில் நிமித்தமாக ஒரு கோடி ரூபாய் கடன் பெற முயன்ற போது, அவருக்கு வந்த குறுஞ்செய்தி ஒன்றில் கமிசனுக்கு கடன் பெற்றுத்தரப்படும் என கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து அந்த எண்ணைத் தொடர்பு கொண்ட போது கோவையைச் சேர்ந்த கவுதம் என்பவர் பணம் ஏற்பாடு செய்வதாகக் கூறியுள்ளார். இதற்காக தனக்கு ரூ.25-லட்சம் ரூபாய் கமிசன் தர வேண்டும் என அவர் கூறியதை ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து ஸ்ரீதேவியின் மகன் ரமணா என்பவர் மூலம் பணத்தைக் கொடுத்து அனுப்பியுள்ளார். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பிஷப் அப்பாசாமி கல்லூரி அருகே வருமாறு அவர்கள் கூறியதை அடுத்து ரமணா அங்கு வந்த போது, கவுதம் உள்ளிட்ட இருவர் அட்டைப் பெட்டி ஒன்றைக் கொடுத்து அதில் ஒரு கோடி ரூபாய் பணம் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

இதனை நம்பி ரமணா அவர்களிடம் 10-லட்சம் ரூபாய் பணம் இருந்த பையைக் கொடுத்துள்ளார். அதனை பெற்றுக்கொண்ட இருவரும் அங்கிருந்து உடனே இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றுள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த ரமணா பெட்டியைப் பிரித்துப் பார்த்த போது, அதில் சில பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிரஷ்கள் மட்டும் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர்களை துரத்திச் செல்ல முயன்ற போதும், அவர்கள் கிடைக்காததால் இது தொடர்பாகக் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி பணத்துடன் மாயமான இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து 6 லட்சம் ரூபாயைப் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர்கள் கவுதம் என்ற போலியான பெயரை பயன்படுத்தியதும், அவர்கள் சுந்தராபுரத்தை சேர்ந்த ஜனகன்(42) மற்றும் செட்டி பாளையத்தைச் சேர்ந்த மார்டின் அமல்ராஜ்(42) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரமணா புகாரில் 25 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறியிருந்த நிலையில், அவர் கொடுத்த பையில் 10 லட்சம் ரூபாய் மட்டுமே இருந்தது என்பது தெரியவந்தது.

மேலும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஜனகனும், மார்ட்டினும் மோசடியாகப் பெற்ற பணத்தைக் கொண்டு, தங்களது கடன்களை அடைத்துவிட்டு, நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டாடியதும் தெரியவந்துள்ளது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...