இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1.100-கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை வேலந்தாவளம் அருகே கூலித் தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை வேலந்தாவளம் சோதனைச் சாவடி அருகே பட்டாம்பாறை, ரங்கசமுத்திரம் பகுதிகளில் கூலி தொழிலாளர்களை குறிவைத்து மர்ம நபர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் வேலந்தாவளம் சோதனைச் சாவடி அருகே உள்ள கிராமங்களில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பட்டாம்பாறை அங்கே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரை போலீசார் பிடித்து விசாரித்த போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களைச் சோதனை செய்தபோது கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. முதல் கட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் பிச்சனூர் பட்டாம்பாறை பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் (24), அவரது நண்பர் மணிகண்டன் (23) என்பதும் தெரியவந்தது.
மேலும் இருவரும் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை பகுதியிலிருந்து கஞ்சா வாங்கி வந்து ரங்க சமுத்திரம் பகுதியிலுள்ள கூலி தொழிலாளர்களுக்கு அதனை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1.100 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை வேலந்தாவளம் சோதனைச் சாவடி அருகே பட்டாம்பாறை, ரங்கசமுத்திரம் பகுதிகளில் கூலி தொழிலாளர்களை குறிவைத்து மர்ம நபர்கள் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் வேலந்தாவளம் சோதனைச் சாவடி அருகே உள்ள கிராமங்களில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பட்டாம்பாறை அங்கே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரை போலீசார் பிடித்து விசாரித்த போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களைச் சோதனை செய்தபோது கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. முதல் கட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் பிச்சனூர் பட்டாம்பாறை பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் (24), அவரது நண்பர் மணிகண்டன் (23) என்பதும் தெரியவந்தது.
மேலும் இருவரும் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை பகுதியிலிருந்து கஞ்சா வாங்கி வந்து ரங்க சமுத்திரம் பகுதியிலுள்ள கூலி தொழிலாளர்களுக்கு அதனை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1.100 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.