மீண்டும் அடர் வனப்பகுதிக்குள் அழுகிய நிலையில் பெண் யானை சடலமாகக் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை சிறுமுகை வனப்பகுதியில் இறந்து அழுகிய நிலையில் பெண் யானை சடலமாகக் கண்டறியப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம், பெத்திக்குட்டை அடர் வனப்பகுதியில் சிறுமுகை வனச்சரக வனவர் மற்றும் வனத்துறை ஊழியர்கள் நேற்று மாலை ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது அங்கு இறந்து அழுகிய நிலையில் பெண் யானை உடல் கண்டறியப்பட்டது. இது குறித்து மாவட்ட வன அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவ அலுவலர் ஆகியோருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் தொடர்ந்து யானைகள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமுகை வனப்பகுதியில் பவானி நீர்பிடிப்பு பகுதியில் பெண் யானை ஒன்று இறந்த நிலையில் கண்டறியப்பட்ட நிலையில்,மீண்டும் அடர் வனப்பகுதிக்குள் அழுகிய நிலையில் பெண் யானை சடலமாகக் கண்டறியப்பட்டுள்ள சம்பவம்சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை கோவை மாவட்ட வன அலுவலர், சிறுமுகை சரக வன பணியாளர்கள் மற்றும் மாவட்ட கால்நடை அலுவலர் சுகுமார், உதவி கால்நடை மருத்துவர் தியாகராஜன் ஆகியோர்தன்னார்வலர்கள் முன்னிலையில் இருந்த யானைக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம், பெத்திக்குட்டை அடர் வனப்பகுதியில் சிறுமுகை வனச்சரக வனவர் மற்றும் வனத்துறை ஊழியர்கள் நேற்று மாலை ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது அங்கு இறந்து அழுகிய நிலையில் பெண் யானை உடல் கண்டறியப்பட்டது. இது குறித்து மாவட்ட வன அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவ அலுவலர் ஆகியோருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் தொடர்ந்து யானைகள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமுகை வனப்பகுதியில் பவானி நீர்பிடிப்பு பகுதியில் பெண் யானை ஒன்று இறந்த நிலையில் கண்டறியப்பட்ட நிலையில்,மீண்டும் அடர் வனப்பகுதிக்குள் அழுகிய நிலையில் பெண் யானை சடலமாகக் கண்டறியப்பட்டுள்ள சம்பவம்சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை கோவை மாவட்ட வன அலுவலர், சிறுமுகை சரக வன பணியாளர்கள் மற்றும் மாவட்ட கால்நடை அலுவலர் சுகுமார், உதவி கால்நடை மருத்துவர் தியாகராஜன் ஆகியோர்தன்னார்வலர்கள் முன்னிலையில் இருந்த யானைக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.