கோவையில் 'காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கை முற்றுகையிட முயன்ற SDPI கட்சியினர் கைது..!

அத்திரைப்படம் இந்து பண்டிட்டுகளை இஸ்லாமியர் துன்புறுத்துவதாக மக்களிடையே பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக எதிர்ப்பு.



கோவை: கோவை, வடகோவை பகுதியில் உள்ள புரூக்பீல்ட் மாலில் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிட்ட திரையரங்கத்தை எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகையிட முயன்றபோது காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

அத்திரைப்படம் இந்து பண்டிட்டுகளை இஸ்லாமியர் துன்புறுத்துவதாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.

இப்படத்தைக் கண்டித்து இஸ்லாமிய இயக்கங்கள், மக்களிடையே பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் வகையில் இத்திரைப்படம் உள்ளதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.



இந்நிலையில், இன்று கோவை வடகோவை பகுதியில் உள்ள புரூக்பீல்ட்மாலில் உள்ள திரை அரங்கத்தில் காஷ்மீர் பைல்ஸ் படம் திரையிடுவதை தடை செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் உசேன் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டி வலியுறுத்தி கோஷமிட்டனர். அசம்பாவிதத்தை தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர்.



இந்த முற்றுகைப் போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் முஸ்தபா, பொதுச் செயலாளர்கள் அப்துல் காதர், முகமது இசாக், பொருளாளர் இக்பால், துணைத் தலைவர் சிவக்குமார், ஷாநவாஸ், எஸ்டிபிஐ கட்சி செய்தி தொடர்பாளர் மன்சூர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 



இவர்களை காவல்துறை கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மேலும், "காஷ்மீர் பைல்ஸ்" திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மற்றும் நடிகர்களை அழைத்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...