கோவை மாநகராட்சியில் நிலைக்குழு தலைவர் மற்றும் நியமனக்குழு உறுப்பினர்கள் தேர்வு

கோவை மாநகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற தேர்தலில், நியமனக் குழு உறுப்பினராக 91 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் இன்று நிலைக்குழு தலைவர் மற்றும் நியமனக்குழு உறுப்பினருக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.

இந்த தேர்தலானது, கோவை மாநகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இதில், நியமனக் குழு உறுப்பினர்கள் தேர்தல் காலை நடைபெற்றது. தேர்தலில், 91 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் நியமனக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.



அதனை தொடர்ந்து, நடைபெற்ற நிலைக்குழு தலைவர்களுக்கான தேர்தலில் 59 வது வார்டு மாமன்ற உறுப்பினர் தீபா தளபதி இளங்கோ, கணக்கு குழு தலைவராகவும்,



80 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாரிச்செல்வன் பொது சுகாதார குழு தலைவராகவும்,



34 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாலதி நாகராஜ் கல்வி குழு தலைவராகவும்,



82வது வார்டு மாமன்ற உறுப்பினர் முபசீரா வரிவிதிப்பு மற்றும் நிதிக் குழு தலைவராகவும்,



63வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தி முருகன் பணிகள் குழு தலைவராகவும்,



72வது வார்டு மாமன்ற உறுப்பினர் சந்தோஷ் நகரமைப்பு குழு தலைவராகவும் நியமிக்கபட்டனர்.

பிற மாமன்ற உறுப்பினர்களால் தேர்தெடுக்கப்பட்ட நிலைக்குழு தலைவர்கள் மற்றும் நியமனக்குழு உறுப்பினருக்கான சான்றிதழை கோவை மாநகராட்சி ஆணையர் வழங்கினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...