மாத சம்பளத்தைப் பெற்றுத் தர வலியுறுத்தி கொரோனா பிரிவு தற்காலிக செவிலியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து அமைதி போராட்டம் நடத்தினர்.
கோவை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா பிரிவு தற்காலிக செவிலியர்கள்தரையில் அமர்ந்து அமைதி போராட்டம் நடத்தினர்.
கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா பிரிவில் தற்காலிக செவிலியர்களாக பணியாற்றி வரும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு 3-மாத கால சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், அதனைப் பெற்றுத் தர மாவட்ட ஆட்சியர் வழிவகை செய்ய வேண்டும் என்றும் நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க வந்திருந்தனர்.
நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அரசு நிகழ்விற்காக வெளியில் சென்றிருந்த காரணங்களால் அவரை சந்திக்க இயலாமல் மனு அளித்து விட்டுச் சென்றுவிட்டனர்.
இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தங்களது கோரிக்கையை அவரிடம் தெரிவித்து விட்டுச் செல்வோம் எனக் கூறி ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் தரையில் அமர்ந்து காத்திருக்கின்றனர்.