சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை: கோவை மதுக்கரை அருகே விவசாயி ஒருவர் தோட்டத்திலிருந்த கிணற்றைச் சுற்றி தூய்மை செய்த போது, தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கோவை மதுக்கரை அறிவொளிநகர் பாலு நாயக்கர் தோட்டத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (53) விவசாயி. திருமணமாகி மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் மாலை முருகேசன் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே இருந்த புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக முருகேசன் கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.
இதில் கிணற்றின் சுவர் மீது மோதியதில் காயமடைந்த அவர், நீரில் மூழ்கி உயிரிழந்தார். நீண்ட நேரமாக முருகேசன் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர் பெண் சத்யா என்பவர் கிணற்றின் அருகே சென்று பார்த்தபோது முருகேசன் சடலமாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர் சத்தம் போடவே அங்கிருந்தவர்கள் வந்து கிணற்றில் இறங்கி முருகேசன் உடலை மேலே கொண்டு வந்தனர். மேலும் இதுகுறித்து அவர்கள் மதுக்கரை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முருகேசன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மதுக்கரை அறிவொளிநகர் பாலு நாயக்கர் தோட்டத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (53) விவசாயி. திருமணமாகி மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் மாலை முருகேசன் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே இருந்த புதர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக முருகேசன் கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.
இதில் கிணற்றின் சுவர் மீது மோதியதில் காயமடைந்த அவர், நீரில் மூழ்கி உயிரிழந்தார். நீண்ட நேரமாக முருகேசன் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர் பெண் சத்யா என்பவர் கிணற்றின் அருகே சென்று பார்த்தபோது முருகேசன் சடலமாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர் சத்தம் போடவே அங்கிருந்தவர்கள் வந்து கிணற்றில் இறங்கி முருகேசன் உடலை மேலே கொண்டு வந்தனர். மேலும் இதுகுறித்து அவர்கள் மதுக்கரை போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முருகேசன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.