கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையத்தில் மன விரக்தியிலிருந்த முதியவர் சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையத்தில் மன விரக்தியிலிருந்த முதியவர் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையம் புது காலனி பகுதியில் வசித்து வந்தவர் கணேசன் (வயது 67). இவரது மனைவி எலும்பு முறிவு ஏற்பட்டு முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் மன விரக்தியிலிருந்த கணேசன் நேற்று இரவு வீட்டில் தண்ணீரில் சாணி பவுடர் கலந்து குடித்து மயக்க நிலையிலிருந்துள்ளார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் கணேசனை மீட்டு 108-ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் கணேசனைப் பரிசோதனை செய்ததில் கணேசன் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, இறந்த கணேசனின் மகள் சாந்தி கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையம் புது காலனி பகுதியில் வசித்து வந்தவர் கணேசன் (வயது 67). இவரது மனைவி எலும்பு முறிவு ஏற்பட்டு முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் மன விரக்தியிலிருந்த கணேசன் நேற்று இரவு வீட்டில் தண்ணீரில் சாணி பவுடர் கலந்து குடித்து மயக்க நிலையிலிருந்துள்ளார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் கணேசனை மீட்டு 108-ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் கணேசனைப் பரிசோதனை செய்ததில் கணேசன் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, இறந்த கணேசனின் மகள் சாந்தி கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.