900-கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார் வடமாநில தொழிலாளி மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை: கிணத்துக்கடவு பழைய செக்போஸ்ட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவலர்கள் முத்து, ஜோசப் உள்ளிட்ட போலீசார் கிணத்துக்கடவு பழைய செக்போஸ்ட் பகுதியில் நேற்று மாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது பழைய செக்போஸ்ட் பகுதியில் உள்ள சுடுகாடு அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரைப் பிடித்து சோதனை செய்தபோது அவர் கையில் வைத்திருந்த மஞ்சள் பையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
பின்னர் அவரை கைது செய்து விசாரணை செய்ததில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சிசர் பிராய் (24)என்பதும் இவர் கோவை கள்ளப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நூல் மில்லில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருவதாகவும், கள்ளப்பாளையம் பகுதியில் மொத்தமாகக் கஞ்சா வாங்கி வந்து கிணத்துக்கடவு பகுதியில் விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்த 900-கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவலர்கள் முத்து, ஜோசப் உள்ளிட்ட போலீசார் கிணத்துக்கடவு பழைய செக்போஸ்ட் பகுதியில் நேற்று மாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது பழைய செக்போஸ்ட் பகுதியில் உள்ள சுடுகாடு அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரைப் பிடித்து சோதனை செய்தபோது அவர் கையில் வைத்திருந்த மஞ்சள் பையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
பின்னர் அவரை கைது செய்து விசாரணை செய்ததில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சிசர் பிராய் (24)என்பதும் இவர் கோவை கள்ளப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நூல் மில்லில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருவதாகவும், கள்ளப்பாளையம் பகுதியில் மொத்தமாகக் கஞ்சா வாங்கி வந்து கிணத்துக்கடவு பகுதியில் விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்த 900-கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.