கோவை கிணத்துக்கடவு பகுதியில் ‘கஞ்சா’ விற்பனை அமோகம்: வடமாநில தொழிலாளி கைது.!!

900-கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார் வடமாநில தொழிலாளி மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கிணத்துக்கடவு பழைய செக்போஸ்ட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவலர்கள் முத்து, ஜோசப் உள்ளிட்ட போலீசார் கிணத்துக்கடவு பழைய செக்போஸ்ட் பகுதியில் நேற்று மாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது பழைய செக்போஸ்ட் பகுதியில் உள்ள சுடுகாடு அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரைப் பிடித்து சோதனை செய்தபோது அவர் கையில் வைத்திருந்த மஞ்சள் பையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

பின்னர் அவரை கைது செய்து விசாரணை செய்ததில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சிசர் பிராய் (24)என்பதும் இவர் கோவை கள்ளப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நூல் மில்லில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருவதாகவும், கள்ளப்பாளையம் பகுதியில் மொத்தமாகக் கஞ்சா வாங்கி வந்து கிணத்துக்கடவு பகுதியில் விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்த 900-கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...