இதையடுத்து, கடை உரிமையாளரான கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சிவக்குமார் (47) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவை மதுக்கரை பாலத்துறை அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 20 கிலோ குட்கா பொருட்களை மதுக்கரை போலீசார் பறிமுதல் செய்து மளிகை கடை உரிமையாளரை கைது செய்தனர்.
கோவை மதுக்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, கோவை மதுக்கரை, பாலத்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, பாலத்துறை பகுதியில் உள்ள சிவானந்தம் (47) என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடையில் சோதனை மேற்கொள்ள போலீசார் சென்ற போது, கடை உரிமையாளர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடியுள்ளார்.
இதையடுத்து, அவரை மடக்கிப் பிடித்த போலீசார் உள்ளே சென்று சோதனை செய்த போது கடையில் சுமார் 20.6 கிலோ தமிழக அரசால் தடை குட்கா பெருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதே போல, க.க.சாவடி பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்ட போது அங்கு சுமார் 18 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கடை உரிமையாளரான கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சிவக்குமார் (47) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மதுக்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, கோவை மதுக்கரை, பாலத்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, பாலத்துறை பகுதியில் உள்ள சிவானந்தம் (47) என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடையில் சோதனை மேற்கொள்ள போலீசார் சென்ற போது, கடை உரிமையாளர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடியுள்ளார்.
இதையடுத்து, அவரை மடக்கிப் பிடித்த போலீசார் உள்ளே சென்று சோதனை செய்த போது கடையில் சுமார் 20.6 கிலோ தமிழக அரசால் தடை குட்கா பெருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதே போல, க.க.சாவடி பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்ட போது அங்கு சுமார் 18 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கடை உரிமையாளரான கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சிவக்குமார் (47) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.