கோவை மதுக்கரை அருகே மளிகைக் கடையில் வைத்திருந்த சுமார் 20 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்..!

இதையடுத்து, கடை உரிமையாளரான கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சிவக்குமார் (47) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மதுக்கரை பாலத்துறை அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 20 கிலோ குட்கா பொருட்களை மதுக்கரை போலீசார் பறிமுதல் செய்து மளிகை கடை உரிமையாளரை கைது செய்தனர்.

கோவை மதுக்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, கோவை மதுக்கரை, பாலத்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, பாலத்துறை பகுதியில் உள்ள சிவானந்தம் (47) என்பவருக்கு சொந்தமான மளிகைக் கடையில் சோதனை மேற்கொள்ள போலீசார் சென்ற போது, கடை உரிமையாளர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடியுள்ளார்.

இதையடுத்து, அவரை மடக்கிப் பிடித்த போலீசார் உள்ளே சென்று சோதனை செய்த போது கடையில் சுமார் 20.6 கிலோ தமிழக அரசால் தடை குட்கா பெருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



இதே போல, க.க.சாவடி பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்ட போது அங்கு சுமார் 18 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கடை உரிமையாளரான கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சிவக்குமார் (47) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...