கோவை ரத்தினபுரி பகுதியில் குடிபோதையில் தொழிலாளி அடித்துக் கொலை - இளைஞர் கைது..!

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து வரமறுத்ததால் 52 வயது தொழிலாளியை அடித்துக் கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை ரத்தினபுரி அருகே ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து வரமறுத்ததால் 52 வயது தொழிலாளியை அடித்துக் கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் பழனிச்சாமி, தொழிலாளியான இவர் வழக்கமாக அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் டாஸ்மாக் அருகே மது அருந்திவிட்டு இருந்த போது, கண்ணப்பநகரை சேர்ந்த ஶ்ரீ விஷ்ணு என்ற இளைஞரும் மது போதையில் அங்கு வந்து பழனிச்சாமியுடன் பேசி உள்ளார்.

அப்போது, ஶ்ரீவிஷ்ணு, பழனிச்சாமியை ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக தெரிகிறது. பழனிச்சாமி மறுத்ததால் அவரை ஶ்ரீ விஷ்ணு கல்லால் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த பழனிச்சாமியை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பழனிச்சாமி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து ஶ்ரீ விஷ்ணுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...