மேலும், அவர்களிடம் இருந்து 6 சவரன் செயின்கள் மற்றும் செயின் பறிக்க பயன்படுத்திய இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை: கோவையில் கல்லூரி செமஸ்டர் கட்டணம் செலுத்த பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலணி பகுதியை சேர்ந்தவர் ராசாத்தி. இவர் கடந்த 15ம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில், இருகூர் அருகே சென்ற சென்ற போது, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் ராசாத்தி அணிந்திருந்த செயினை பறித்து தப்பிச் சென்றனர்.
இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்டண விசாரணையில் பிடிபட்ட இருவரும் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தது தெரியவந்தது. பிரகாஷ் இரண்டாம் ஆண்டு, தமிழ் செல்வன் மூன்றாம் ஆண்டு படித்து வந்ததாகவும், இருவரின் தந்தையும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்ததால், கல்லூரி செமஸ்டர் கட்டணம் செலுத்த சிரமப்பட்டு வந்ததாகவும், இதனால் கடந்த 15ம் தேதி இரண்டு பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், செயினை தனது சக நண்பரிடம் கொடுத்து தனது தாயின் நகை என கூறி, விற்று ரூ.1 லட்சம் பணத்தை வாங்கி 2 செமஸ்டர் கட்டணம் செலுத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 6 சவரன் நகைகளையும், செயின் பறிக்க பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலணி பகுதியை சேர்ந்தவர் ராசாத்தி. இவர் கடந்த 15ம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில், இருகூர் அருகே சென்ற சென்ற போது, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் ராசாத்தி அணிந்திருந்த செயினை பறித்து தப்பிச் சென்றனர்.
இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதல் கட்டண விசாரணையில் பிடிபட்ட இருவரும் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தது தெரியவந்தது. பிரகாஷ் இரண்டாம் ஆண்டு, தமிழ் செல்வன் மூன்றாம் ஆண்டு படித்து வந்ததாகவும், இருவரின் தந்தையும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்ததால், கல்லூரி செமஸ்டர் கட்டணம் செலுத்த சிரமப்பட்டு வந்ததாகவும், இதனால் கடந்த 15ம் தேதி இரண்டு பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், செயினை தனது சக நண்பரிடம் கொடுத்து தனது தாயின் நகை என கூறி, விற்று ரூ.1 லட்சம் பணத்தை வாங்கி 2 செமஸ்டர் கட்டணம் செலுத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 6 சவரன் நகைகளையும், செயின் பறிக்க பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.