கோவை செட்டிப்பாளையம் கரி மோட்டார்ஸ்ஸில் 4வது கோ-கார்ட் வடிவமைப்பு போட்டி இந்திய மோட்டார்ஸ் ஸ்போட்ஸ் சங்கங்களின் அங்கிகாரம் பெற்று கோவையில் கல்லூரி மாணவர்காளல் உருவாக்கப்பட்ட நான்கு சக்கர வாகன பந்தயம் கரி மோட்டார்ஸ் ஸ்பீட்வே-ல் நடத்தப்படுகிறது.

இதன் தலைவர் உமேஷ் கூறுகையில்; இப்போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து, 169 கல்லூரிகள் இதில் பங்கேற்கின்றனர். சோதனைகளுக்கு பின் 97 கல்லூரிகள் இரண்டாவது சுற்றுக்கு தேர்தெடுக்கப்படுவர் மேலும் இறுதிசுற்றுக்கு 38 கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 28 கல்லூரிகள் நாளை (செவ்வாய்கிழமை) நடக்கும் பந்தையத்தில் பங்கேற்கின்றனர். மோட்டார் வாகன பந்தையத்தை பங்கேற்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் சுற்று சூழல் பாதிக்காத வாகனங்களை உருவாக்கவும் மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தவும் இப்போட்டி நடத்தப்படுகிறது மேலும் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் தேர்தெடுக்கப்பட்டும் ரூபாய் 3 இலட்சம் ஒட்டு மொத்த பரிசாக வழங்கப்படும் என தெரிவித்தார்.
