உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.


திருப்பூர்: இன்று மே 12, உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், செவிலியர்களின் அர்ப்பணிப்பு சேவையை போற்றும் மற்றும் அவர்களது கடமையை உணர்த்தும் வகையில் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



செவிலியர் குலவிளக்காக போற்றப்படும் “புளோரன்ஸ் நைட்டிங்கேல்” அம்மையாரின் பிறந்தநாளான இன்று உலக செவிலியர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி உலகெங்கும் மருத்துவத் துறையில் செவிலியர்களின் ஒப்பற்ற சேவையைப் போற்றும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.



அதன்படி, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செவிலியர் பள்ளி முதல்வர் முத்துசாமி தலைமை தாங்கினார்.

இதில் 500-க்கும் மேற்பட்ட செவிலியர் பயிற்சி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, நோயாளிகளுக்கு பாகுபாடின்றி தார்மீக அடிப்படையில் அர்ப்பணிப்புடன் சேவை செய்வோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து மருத்துவமனை வளாகம் முழுவதும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் பங்கேற்ற மாணவிகள், “ஆரோக்கியமான சமுதாயம் அமைப்போம்”, “செவிலியர் பணியே புனிதமானது”, “நோய் தடுப்பு முறைகளை பின்பற்றுவோம்” உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

முன்னதாக, உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி செவிலியர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

Newsletter

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...