மனநலம் பாதிப்பு ஏற்பட்டு குடும்பத்துடன் சிகிச்சைக்காக சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்த நிலையில், மண்ணெண்னை ஊற்றிக் தற்கொலை.
கோவை: கோவை மாதம்பட்டியில் வீட்டில் இருந்த இளம் பெண் திடீரென உடலில் மண்ணெண்னை ஊற்றிக் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பேரூர் மாதம்பட்டியை சேர்ந்தவர் அர்ஜூணன். இவரது மகன் சத்திய பிரியா (22). கார்மன்ஸ் டெக்னாலஜி படித்துள்ளார். இவர் கடந்த 7 ஆண்டுகளாக அடிக்கடி திடீரென மனநலம் பாதிப்பு ஏற்பட்டு சரியாகி வந்தது. இதற்காக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று சூலூர் பகுதிக்கு குடும்பத்துடன் சிகிச்சைக்காக சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளனர். மாலை வீட்டில் இருந்த போது திடீரென சத்திய பிரியா வீட்டில் இருந்த பூஜை அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டதாக தெரிகிறது.
அப்போது, அறையில் இருந்து கரும்புகை வெளியேறியதால் சந்தேகமடைந்த அர்ஜூணன் நீண்ட நேரம் போராடி கடப்பாறை கொண்டு கதவை உடைத்துள்ளார்.

உள்ளே சென்று பார்த்த போது சத்திய பிரியா உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக இருந்துள்ளார்.

பின்னர், இதுகுறித்து தகவலறிந்து வந்த பேரூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை பேரூர் மாதம்பட்டியை சேர்ந்தவர் அர்ஜூணன். இவரது மகன் சத்திய பிரியா (22). கார்மன்ஸ் டெக்னாலஜி படித்துள்ளார். இவர் கடந்த 7 ஆண்டுகளாக அடிக்கடி திடீரென மனநலம் பாதிப்பு ஏற்பட்டு சரியாகி வந்தது. இதற்காக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று சூலூர் பகுதிக்கு குடும்பத்துடன் சிகிச்சைக்காக சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளனர். மாலை வீட்டில் இருந்த போது திடீரென சத்திய பிரியா வீட்டில் இருந்த பூஜை அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டதாக தெரிகிறது.
அப்போது, அறையில் இருந்து கரும்புகை வெளியேறியதால் சந்தேகமடைந்த அர்ஜூணன் நீண்ட நேரம் போராடி கடப்பாறை கொண்டு கதவை உடைத்துள்ளார்.
உள்ளே சென்று பார்த்த போது சத்திய பிரியா உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக இருந்துள்ளார்.
பின்னர், இதுகுறித்து தகவலறிந்து வந்த பேரூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.