ஈஷாவில்‌ ஐ.ஏ.எஸ்‌., ஐ.பி.எஸ்‌., அதிகாரிகளுக்கு சிறப்பு யோகா வகுப்பு - பல்வேறு மாநில அதிகாரிகள்‌ பங்கேற்பு..!

மத்திய, மாநில அரசுகளில்‌ பணியாற்றும்‌ அரசு அதிகாரிகளுக்கான 5 நாள்‌ சிறப்பு யோகா வகுப்பு மார்ச்‌ 21ம்‌ தேதி முதல்‌ மார்ச்‌ 25ம்‌ தேதி வரை நடைபெற்றது.


கோவை: மத்திய, மாநில அரசுகளில்‌ பணியாற்றும்‌ அரசு அதிகாரிகளுக்கான 5 நாள்‌ சிறப்பு யோகா வகுப்பு மற்றும்‌ தலைமைப்‌ பண்பு மேம்பாட்டுப் பயிற்சி கோவை ஈஷா யோகா மையத்தில்‌ மார்ச்‌ 21ம்‌ தேதி முதல்‌ மார்ச்‌ 25ம்‌ தேதி வரை நடைபெற்றது.

இந்திய அரசுப் பணியாளர்‌ மற்றும்‌ பயிற்சித்‌ துறையுடன்‌ (DoPT - Department of personal and training) இணைந்து நடத்தப்பட்ட இப்பயிற்சி வகுப்பில்‌ பல்வேறு மாநிலங்களைச்‌ சேர்ந்த ஐ.ஏ.எஸ்‌, ஐ.பி.எஸ்‌, ஐ.எஃப்‌.எஸ்‌ அதிகாரிகள்‌ உட்பட 61 அரசு அதிகாரிகள்‌ பங்கேற்றனர்‌.



அவர்களுக்கு 'ஷாம்பவி மஹாமுத்ரா க்ரியா' என்ற சக்திவாய்ந்த யோக பயிற்சி கற்றுக்கொடுக்கப்பட்டது. அத்துடன்‌, உடல்‌ மற்றும்‌ மன நலனை மேம்படுத்துவதற்கான எளிமையான யோக பயிற்சிகளும்‌ கற்றுக்கொடுக்கப்பட்டன.

அரசு அதிகாரிகள்‌ மன அழுத்தம்‌ நிறைந்த சூழ்நிலைகளை சரியாக கையாள்வது, உள்நிலையில்‌ அமைதியையும்‌ முழுமையையும்‌ உணர்வது, மற்றவர்களுடனான நட்புறவை மேம்படுத்துவது, மனதில்‌ தெளிவு, உணர்ச்சியில்‌ சமநிலையை உருவாக்க முடிவெடுக்கும்‌ திறனை

மேம்படுத்துவது போன்றவை இந்த பயிற்சி வகுப்பின்‌ பிரதான நோக்கங்கள்‌ ஆகும்‌.

மேலும்‌, அவர்கள்‌ இவ்வகுப்பில்‌ கற்றுக்கொடுக்கப்பட்ட பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருவதன்‌ மூலம்‌ நீண்ட நாட்களாக அவர்கள்‌ சந்தித்து வரும்‌ உடல்‌ மற்றும்‌ மன ரீதியான பிரச்சனைகளில்‌ இருந்தும்‌ விடுபட முடியும்‌.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...