இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு காவல் நிலையத்தில், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த கார்த்திக் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் படுகாயமடைந்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் சரவணகுமார் (27). இவர் நேற்று மாலை கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையத்தில் இருக்கும் நண்பரை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு, மீண்டும் கோவில்பாளையத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது, பொள்ளாச்சி-கோவை சாலையில் சரவணகுமார் வந்து கொண்டிருக்கும் போது, பின்னால் வந்த கார், சரவணக்குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் தலை, கை போன்ற பகுதியில் காயமடைந்த சரவணகுமாரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து சரவணகுமாரின் மனைவி ஜெயந்தி கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த கார்த்திக் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் சரவணகுமார் (27). இவர் நேற்று மாலை கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையத்தில் இருக்கும் நண்பரை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு, மீண்டும் கோவில்பாளையத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது, பொள்ளாச்சி-கோவை சாலையில் சரவணகுமார் வந்து கொண்டிருக்கும் போது, பின்னால் வந்த கார், சரவணக்குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் தலை, கை போன்ற பகுதியில் காயமடைந்த சரவணகுமாரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து சரவணகுமாரின் மனைவி ஜெயந்தி கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த கார்த்திக் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.