கோவை கிணத்துக்கடவு அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் இருவர் படுகாயம்..!

இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே மூலக்கடையில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கிணத்துக்கடவு சிங்கையன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி, இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் வீரப்பகவுண்டனூர் சென்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு சிங்கையன்புதூர் பகுதிக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது, மூலக்கடை பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் அய்யாசாமி ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் அய்யாசாமி மற்றும் விபத்தை ஏற்படுத்திய ஜெயராமன் ஆகிய இருவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

இதையடுத்து, இருவரையும் மீட்ட அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.

மேலும், இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...