கோவை வெங்கிட்டாபுரம் பகுதியைச் சேர்ந்த மகளிர் குழுவினர் தனியார் மைக்ரோ பைனான்ஸில் அநியாய வட்டி வசூலிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு.
கோவை: கோவையில் வாங்கிய கடன் தொகைக்கு மேல் மேலும் பணம் கேட்டு மிரட்டும் தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மகளிர் குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை வெங்கட்டாபுரம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து மகளிர் குழு அமைத்து தனியார் மைக்ரோ பைனான்ஸில் கடன் பெற்று தொழில் புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், தனியார் மைக்ரோ நிர்வாகத்திடம் ரூ.40 ஆயிரம் கடன் பெற்று மாதம் ரூ. 2050 வீதம் 15 தவணைகள் செலுத்திய நிலையில், மேலும் 51 ஆயிரம் கட்ட வேண்டும் என அநியாய வட்டி விதித்து வசூலிப்பதாக பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும், கடன் தொகை கேட்டு அடாவடியாகவும், மரியாதைக் குறைவாகவும், அந்த பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் பேசுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அம்மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.