வால்பாறையில் மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சாலை மறியல்.!!

விலைவாசியைக் கட்டுப்படுத்த, பெட்ரோல் டீசல் விலை குறைக்க வலியுறுத்தி மத்திய அரசைக் கண்டித்து வால்பாறையில் தொழிற்சங்கங்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கோவை: வால்பாறையில் மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து நிறுத்தத்தால் பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் மத்திய அரசைக் கண்டித்து பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் இரண்டு நாள் அடையாளமாகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

வால்பாறையில் உள்ள திமுக தொழிற்சங்கம், தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக தொழிற்சங்கம் விடுதலை சிறுத்தை தொழிற்சங்கம் மதிமுக தொழிற்சங்கம் போன்றவைகள் இணைந்து சுமார் 50-க்கு மேற்பட்டவர்கள் காந்திசிலை பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



பின்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வால்பாறை காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களைக் கலைத்துச் சென்றனர்.



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அங்கன்வாடி ஊழியர்கள் சுமார் 20 பேருக்கு மேற்பட்டவர்கள் காந்தி சிலை வளாகத்தில் மேலும் ஒரு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விலைவாசியைக் கட்டுப்படுத்த பெட்ரோல் டீசல் விலை குறைக்க இவற்றை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வால்பாறை பகுதியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இதில் இன்று நான்கு பேருந்துகள் மட்டுமே இயங்கியதால் வால்பாறையில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் சிரமப்பட்டனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...