கோவை திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் பதாகைகளை ஏந்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
கோவை: 14-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற் சங்கத்தினர் இன்றும், நாளையும், நாடு தழுவிய இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைக் கைவிட வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கக் கூடாது, பெட்ரோலிய பொருள்களின் விலையைக் கட்டுக்குள் வைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற் சங்கத்தினர் இன்றும், நாளையும், நாடு தழுவிய இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவை திருச்சி சாலையில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில் இன்சூரன்ஸ் ஊழியர்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் பதாகைகளை ஏந்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
எல்.ஐ.சி தனியார் மயமாக்கப்படுவது என்பது ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்று தெரிவித்தனர். வேலை நிறுத்தம் காரணமாக, எஸ்.ஐ.சி அலுவலகம் வெறிச்சோடிகாணப்பட்டது.