ஒரே நாடு ஒரே அரசியல் என்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர் அந்த அரசியல் ஆபத்தானது எனவும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனவும் பதிலளித்தார்.
கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் "இறைவேதம் அழைக்கிறது" என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்யப்பட்ட குர்ஆன் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அந்த புத்தகத்தை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தேசிய தலைவர் பாக்கர் வெளியிட திருமாவளவன் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த தொல் திருமாவளவன், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தேர்தலில் பங்கு பெறாத ஒரு அமைப்பு என்றும் அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வோடு இருக்கின்ற இயக்கம் என தெரிவித்தார்.
தற்பொழுது இந்த குர்ஆன் தமிழில் எளிய நடையில் உருவாக்கப்பட்டு உள்ளது எனவும், இந்த புத்தக வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் ஒரு மாணவனை அவனது சாதியின் பெயரைச் சொல்லி இழிவு படுத்தியதால் அந்த மாணவன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்து உள்ளதாகத் தெரிவித்த அவர், தமிழக அரசு அந்த மாணவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு தரவேண்டும் எனவும் தெரிவித்தார்.
தமிழக முதல்வரின் துபாய் பயணத்தைச் சிலர் உள் நோக்கோடு விமர்சிப்பதைக் கைவிட வேண்டும் எனவும் கூறினார். ஹிஜாப் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கியது மட்டும் தீர்ப்பு அல்ல என தெரிவித்த அவர் உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம் எனவும் உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது எனவும் தெரிவித்தார்.
பாஜக இந்த தேர்தலில் பல்வேறு இடங்களில் தோல்வியைத் தழுவி உள்ளது குறித்துப் பேசிய அவர் மக்கள் பாஜக வேறு இந்து சமய நம்பிக்கைகள் வேறு என்பதைப் புரியத் தொடங்கி விட்டார்கள் என தெரிவித்தார். பாஜக பற்றியும் இந்து சமயத்தைப் பற்றியும் தெரிந்து கொண்டால் நாட்டில் எவ்வித பிரச்சனையும் ஏற்படாது எனவும் கூறினார்.
இந்திய அரசு தமிழக மீனவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக மீனவர்கள் மீது தமிழ்நாடு அரசு ஒரு சிறப்பான கவனத்தைச் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். மேலும் தற்பொழுது இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு வருபவர்களை அகதிகள் என்ற முறையில் இந்திய அரசு வரவேற்று உரியப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ள அகில இந்திய வேலைநிறுத்தத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருள் சங்க அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும் பங்கேற்கின்றன என தெரிவித்த அவர் பொது மக்களும் இதற்கு முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஒரே நாடு ஒரே அரசியல் என்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர் அந்த அரசியல் ஆபத்தானது எனவும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனவும் பதிலளித்தார்.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அந்த புத்தகத்தை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தேசிய தலைவர் பாக்கர் வெளியிட திருமாவளவன் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த தொல் திருமாவளவன், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தேர்தலில் பங்கு பெறாத ஒரு அமைப்பு என்றும் அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வோடு இருக்கின்ற இயக்கம் என தெரிவித்தார்.
தற்பொழுது இந்த குர்ஆன் தமிழில் எளிய நடையில் உருவாக்கப்பட்டு உள்ளது எனவும், இந்த புத்தக வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் ஒரு மாணவனை அவனது சாதியின் பெயரைச் சொல்லி இழிவு படுத்தியதால் அந்த மாணவன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்து உள்ளதாகத் தெரிவித்த அவர், தமிழக அரசு அந்த மாணவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு தரவேண்டும் எனவும் தெரிவித்தார்.
தமிழக முதல்வரின் துபாய் பயணத்தைச் சிலர் உள் நோக்கோடு விமர்சிப்பதைக் கைவிட வேண்டும் எனவும் கூறினார். ஹிஜாப் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கியது மட்டும் தீர்ப்பு அல்ல என தெரிவித்த அவர் உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம் எனவும் உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது எனவும் தெரிவித்தார்.
பாஜக இந்த தேர்தலில் பல்வேறு இடங்களில் தோல்வியைத் தழுவி உள்ளது குறித்துப் பேசிய அவர் மக்கள் பாஜக வேறு இந்து சமய நம்பிக்கைகள் வேறு என்பதைப் புரியத் தொடங்கி விட்டார்கள் என தெரிவித்தார். பாஜக பற்றியும் இந்து சமயத்தைப் பற்றியும் தெரிந்து கொண்டால் நாட்டில் எவ்வித பிரச்சனையும் ஏற்படாது எனவும் கூறினார்.
இந்திய அரசு தமிழக மீனவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக மீனவர்கள் மீது தமிழ்நாடு அரசு ஒரு சிறப்பான கவனத்தைச் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். மேலும் தற்பொழுது இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு வருபவர்களை அகதிகள் என்ற முறையில் இந்திய அரசு வரவேற்று உரியப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ள அகில இந்திய வேலைநிறுத்தத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருள் சங்க அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும் பங்கேற்கின்றன என தெரிவித்த அவர் பொது மக்களும் இதற்கு முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஒரே நாடு ஒரே அரசியல் என்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர் அந்த அரசியல் ஆபத்தானது எனவும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனவும் பதிலளித்தார்.