முதல்கட்ட விசாரணையில் சமையல் அறையிலிருந்த வடை சுடத் தயாராக வைத்திருந்த எண்ணெய்யில் தீப்பிடித்து எரிந்ததால் உள்ளே இருந்த ஊழியர்கள் வெளியே ஓடி வந்தது தெரியவந்தது.
கோவை: கோவை ரயில்நிலையம் வளாகத்தில் உள்ள தனியார் உணவகத்தில் திடீரென ஏற்பட்ட தீயை உடனடியாக தீயணைப்புத் துறை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
கோவை ரயில்நிலையம் வழியாகக் கேரளா, பெங்களூர், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் எப்போதுமே மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் கோவை ரயில்நிலைய வளாகத்தில் தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தின் சமையல் அறையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு வந்த தெற்கு தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. முதல்கட்ட விசாரணையில் சமையல் அறையிலிருந்த வடை சுடத் தயாராக வைத்திருந்த எண்ணெய்யில் தீப்பிடித்து எரிந்ததால் உள்ளே இருந்த ஊழியர்கள் வெளியே ஓடி வந்தது தெரியவந்தது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.