காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தைத் தமிழகத்தில் திரையிடக் கூடாது- எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்..!!

காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் இருப்பதால் திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் எந்த மொழியிலும் திரையிடக்கூடாது என தெரிவித்தார்.


கோவை: காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தைத் தமிழகத்தில் திரையிடக் கூடாது என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்தார்.

கோவையில் நடைபெற உள்ள ஹிஜாப் மாநாட்டிற்கு வருகை தந்த எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.



அப்போது பேசிய அவர் "காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் இருப்பதால் திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் எந்த மொழியிலும் திரையிடக்கூடாது.

மேலும் இத் திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்படுமானால் திரையரங்குகளை முற்றுகையிட்டு எஸ்டிபிஐ கட்சி மிகப் பெரிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்படும். தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் சிறுபான்மை மக்களான முஸ்லீம்கள் புறக்கணிக்கப்பட்டது.

முஸ்லீம் முன்னேற்றத்திற்குத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக ஐஐடி கல்வி நிலையத்தில் மத, சாதிய வெறுப்பைக் களையக் குழு அமைக்க வேண்டும். 38-முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெள்ளலூர்‌ தேர்தல் விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டிருப்பதாகவும் இவ்விவகாரத்தையும் நடைபெற்ற மாநகராட்சி தேர்தலை நேர்மையாக நடத்தவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. இது போன்ற ஜனநாயக மாண்பின் மீறி நடத்தப்படும் தேர்தல்களில் குதிரை நேரத்திற்கு மட்டுமே வழிவகுக்கும் என தெரிவித்தார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...