திமுக கவுன்சிலரின் கணவர் மீது தாக்குதல்- வெள்ளலூர் பேரூராட்சி தலைவரின் மகன் உட்பட அதிமுகவினர் 9-பேர் கைது...!

9-பேர் மீதும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தலின் போது ஏற்பட்ட மோதலில் திமுக கவுன்சிலரின் கணவரைத் தாக்கிய அதிமுக பேரூராட்சி தலைவர் மகன் உட்பட 9-பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் துவங்குவதற்கு முன் திமுக -அதிமுக கவுன்சிலர்கள் வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகம் வந்த போது, திமுக - அதிமுக கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் தடியடி நடத்திக் கலைத்தனர். இதில் திமுக 4-ஆவது வார்டு கவுன்சிலர் குணசுந்தரி கணவர் செந்தில்குமார் மண்டை உடைந்தது. மேலும் பார்த்திபன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக திமுகவினர் கொடுத்த புகார் அடிப்படையில் வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் மருதாசலத்தின் மகன் குமரேசன், உட்படச் சபரி பிரியன், கரிகாலன், கார்த்திக்ராஜா, மனோஜ் குமார், இரகுபதி, சண்முகம், சவுந்திரராஜ், நாகராஜ் ஆகிய 9-பேர் மீது 147,148, 341,342, 324, 506/2, மற்றும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...