மேலும், சில காலங்களாக வன விலங்கு இறப்பு அதிகரித்து வருவதாக வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கோவை: கோவை வால்பாறை அருகே 8 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை உயிரிழப்பு வனத்துறையினர் விசாரணை.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டு மாடு, மான், கரடி, சிங்கவால் குரங்கு போன்ற வனவிலங்குகள் உள்ளது.
வால்பாறை அருகே ஸ்டான் மோர் எஸ்டேட் பகுதியில் 21வது தேயிலைத் தோட்டத்தில் துர்நாற்றம் வீசியுள்ளது. அப்பகுதியில் தேயிலை பறிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, மானாம்பள்ளி வன சரகர் மணிகண்டன் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்ததில் சிறுத்தை ஒன்று அழுகிய நிலையில் இறந்து உள்ளது. ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் மற்றும் வனத்துறை மருத்துவர் சுகுமாரன் தலைமையில் சிறுத்தையின் உடலை உடல் கூறாய்வு செய்தனர்.
சிறுத்தைக்கு சுமார் எட்டு வயதிலிருந்து 10 வயது இருக்கும் என்றும், பெண் சிறுத்தை என்றும் வயது முதிர்ந்த நிலை காரணமாக இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
பின்பு, வனத்துறை வன விலங்கு மனித மோதல் தடுப்பு குழு மையத்தில் சிறுத்தையின் உடலை தீ வைத்து எரித்தனர். சில காலங்களாக வன விலங்கு இறப்பு அதிகரித்து வருவதாக வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டு மாடு, மான், கரடி, சிங்கவால் குரங்கு போன்ற வனவிலங்குகள் உள்ளது.
வால்பாறை அருகே ஸ்டான் மோர் எஸ்டேட் பகுதியில் 21வது தேயிலைத் தோட்டத்தில் துர்நாற்றம் வீசியுள்ளது. அப்பகுதியில் தேயிலை பறிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, மானாம்பள்ளி வன சரகர் மணிகண்டன் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்ததில் சிறுத்தை ஒன்று அழுகிய நிலையில் இறந்து உள்ளது. ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் மற்றும் வனத்துறை மருத்துவர் சுகுமாரன் தலைமையில் சிறுத்தையின் உடலை உடல் கூறாய்வு செய்தனர்.
சிறுத்தைக்கு சுமார் எட்டு வயதிலிருந்து 10 வயது இருக்கும் என்றும், பெண் சிறுத்தை என்றும் வயது முதிர்ந்த நிலை காரணமாக இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
பின்பு, வனத்துறை வன விலங்கு மனித மோதல் தடுப்பு குழு மையத்தில் சிறுத்தையின் உடலை தீ வைத்து எரித்தனர். சில காலங்களாக வன விலங்கு இறப்பு அதிகரித்து வருவதாக வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.