கோவை மாநகராட்சியில் ரூ. 9.12 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை பணிகள் மற்றும் சுகாதார மையங்கள்  - அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்…!

கோவை மாநகராட்சியில் ரூபாய். 9.12 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை பணிகள் மற்றும் சுகாதார ஆரோக்கிய மைய கட்டிட பணிகளை, தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.



கோவை: கோவை மாநகராட்சியில் ரூபாய். 9.12 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை பணிகள் மற்றும் சுகாதார ஆரோக்கிய மற்றும் ஆய்வக மைய கட்டிட பணிகளை, தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். 

கோவைக்கு தமிழக முதல்வரிடம் சிறப்பு நிதி பெற்று பல்வேறு பணிகளை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்து வருகிறார். இந்நிலையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 26 வது வார்டு பீளமேடு பயனீர் சாலையில் ரூபாய். 22 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார ஆய்வக மையம் கட்ட பூமி பூஜையை துவக்கி வைத்தாவர்.



தொடர்ந்து, 28 வது வார்டு ஜெயில் ரோடு, இளங்கோ நகர், விளாங்குறிச்சி, வெள்ளக்கிணறு விசுவாசபுரம், சின்னவேடம்பட்டி, அப்பநாயக்கன் பாளையம், கவுண்டம்பாளையம், அன்னை சத்யா நகர் ஆகிய. பகுதிகளில் ஆரோக்கிய மையம் கட்டும் பணிகளுக்கான பூமி பூஜையை துவக்கி வைத்தும், தொடர்ந்து முத்தண்ண குளத்தில் தார்சாலை புதுப்பித்தல் பணியை, அமைச்சர் துவக்கி வைத்தார். 



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசுகையில், "தொடர்ந்து மாநகராட்சிக்கு உட்பட்ட 13 வார்டுகளில் ரூ 9.12 கோடி மதிப்பீட்டிலான பூமி பூஜைகளையும், முடிந்த பணிகளையும் துவக்கி வைத்துள்ளேன்.

கோவை மாநகராட்சி தமிழ்நாடு நிலையான நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழரூ. 34.93 கோடி மதிப்பீட்டில் 51.35 கிலோ மீட்டர் நீளத்திற்கு 205 எண்ணிக்கையிலான சாலை பணிகள் அமைக்கும் பணிகளுக்கு அனுமதி பெறப்பட்டது. இதில், முதற்கட்டமாக கடந்த ஜனவரி மாதம் 6.07 கிலோமீட்டர் நீளத்திற்கு மதிப்பீடில் ரூபாய்8.18 கோடிக்கு 4 சாலை பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. 



இந்நிலையில், 2 ஆம் கட்டமாக இன்று 10.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூபாய்7.14 கோடி மதிப்பீட்டில் 53 சாலை பணிகளை பூமி பூஜை போட்டு துவக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 7 இடங்களில் தலா ரூபாய்25 லட்சம் மதிப்பீட்டில் நகர்புற ஆரோக்கிய மையம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது. 63 சுகாதார ஆரோக்கியமையம் கட்ட, ரூபாய். 16.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், 

முதற்கட்டமாக 8 பணிகள் துவங்க ரூபாய். 1.97 கோடி மதிப்பீட்டில் என மொத்தமாக இன்று ரூபாய். 9.12 கோடி மதிப்பீட்டில் 13 பூமி பூஜைகள் நடைபெற்றது", என்றார். 

இந்த நிகழ்ச்சிகளில் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா ஆர்.கிருஷ்ணன், முன்னாள் எம்.பி நாகராஜ், முன்னாள் மேயர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...