கோவை மாநகராட்சியில் ரூபாய். 9.12 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை பணிகள் மற்றும் சுகாதார ஆரோக்கிய மைய கட்டிட பணிகளை, தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
கோவை: கோவை மாநகராட்சியில் ரூபாய். 9.12 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை பணிகள் மற்றும் சுகாதார ஆரோக்கிய மற்றும் ஆய்வக மைய கட்டிட பணிகளை, தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
கோவைக்கு தமிழக முதல்வரிடம் சிறப்பு நிதி பெற்று பல்வேறு பணிகளை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்து வருகிறார். இந்நிலையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 26 வது வார்டு பீளமேடு பயனீர் சாலையில் ரூபாய். 22 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார ஆய்வக மையம் கட்ட பூமி பூஜையை துவக்கி வைத்தாவர்.
தொடர்ந்து, 28 வது வார்டு ஜெயில் ரோடு, இளங்கோ நகர், விளாங்குறிச்சி, வெள்ளக்கிணறு விசுவாசபுரம், சின்னவேடம்பட்டி, அப்பநாயக்கன் பாளையம், கவுண்டம்பாளையம், அன்னை சத்யா நகர் ஆகிய. பகுதிகளில் ஆரோக்கிய மையம் கட்டும் பணிகளுக்கான பூமி பூஜையை துவக்கி வைத்தும், தொடர்ந்து முத்தண்ண குளத்தில் தார்சாலை புதுப்பித்தல் பணியை, அமைச்சர் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசுகையில், "தொடர்ந்து மாநகராட்சிக்கு உட்பட்ட 13 வார்டுகளில் ரூ 9.12 கோடி மதிப்பீட்டிலான பூமி பூஜைகளையும், முடிந்த பணிகளையும் துவக்கி வைத்துள்ளேன்.
கோவை மாநகராட்சி தமிழ்நாடு நிலையான நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழரூ. 34.93 கோடி மதிப்பீட்டில் 51.35 கிலோ மீட்டர் நீளத்திற்கு 205 எண்ணிக்கையிலான சாலை பணிகள் அமைக்கும் பணிகளுக்கு அனுமதி பெறப்பட்டது. இதில், முதற்கட்டமாக கடந்த ஜனவரி மாதம் 6.07 கிலோமீட்டர் நீளத்திற்கு மதிப்பீடில் ரூபாய்8.18 கோடிக்கு 4 சாலை பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில், 2 ஆம் கட்டமாக இன்று 10.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூபாய்7.14 கோடி மதிப்பீட்டில் 53 சாலை பணிகளை பூமி பூஜை போட்டு துவக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 7 இடங்களில் தலா ரூபாய்25 லட்சம் மதிப்பீட்டில் நகர்புற ஆரோக்கிய மையம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது. 63 சுகாதார ஆரோக்கியமையம் கட்ட, ரூபாய். 16.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில்,
முதற்கட்டமாக 8 பணிகள் துவங்க ரூபாய். 1.97 கோடி மதிப்பீட்டில் என மொத்தமாக இன்று ரூபாய். 9.12 கோடி மதிப்பீட்டில் 13 பூமி பூஜைகள் நடைபெற்றது", என்றார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா ஆர்.கிருஷ்ணன், முன்னாள் எம்.பி நாகராஜ், முன்னாள் மேயர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.