தாராபுரம் சாலை கரட்டாங்காடு பகுதியில் உள்ள "ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோயில்" பொங்கல் திருவிழாவில் பங்கேற்பு.
திருப்பூர்: திருப்பூர் கரட்டாங்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவில் இஸ்லாமிய பெண் வார்டு கவுன்சிலர் பங்கேற்றதை பொதுமக்கள் வெகுவாக வரவேற்றனர்.
திருப்பூர் தாராபுரம் சாலை கரட்டாங்காடு பகுதியில் அமைந்துள்ள "ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோயில்" பொங்கல் திருவிழாவின் ஒரு பகுதியாக அன்னதானம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், துணைமேயர் MKM.பாலு, மற்றும் 56வது வார்டு பாஜக கவுன்சிலர் காடேஸ்வரா தங்கராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு அன்னதான நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
திருப்பூர் மாநகராட்சி 50வது வார்டு கவுன்சிலர் பெனாசிர் பேகம் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். திருப்பூர் மாநகர மாவட்ட இந்து அன்னையர் முன்னணி தலைவர் சித்ரா தினகரன் உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில், கோவில் நிர்வாகிகள் நாகராஜ், கன்னிமுத்து, தெய்வசிகாமணி, கேசவன், உள்பட விழா குழுவினரும் பலர் வருகை தந்த அனைவரையும் வரவேற்று மகிழ்ந்தனர்.