கோவை மாநகராட்சி மேயரிடம் பீளமேடு பகுதியில், உள்ள பல்வேறு கோரிக்கைகளை, உடனடியாக செய்து தரக்கோரி 26-வது வார்டு கவுன்சிலர் கோரிக்கை மனுக்களின் தொகுப்பினை வழங்கினார்.
கோவை: கோவை மாநகராட்சி பீளமேடு பகுதியில், உள்ள பல்வேறு கோரிக்கைகளை, உடனடியாக செய்து தரக்கோரி கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் 26- வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி கோரிக்கை மனுக்களின் தொகுப்பினை வழங்கினார்.
கோவை மாநகராட்சி, 26-வது வார்டுக்குட்பட்ட பீளமேடு பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, அப்பகுதி 26-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரியைச் சந்தித்து பல்வேறு மனுக்களை வழங்கியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட மனுக்களை ஒரே தொகுப்பாகக் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் 26-வது வார்ரடு மாமன்ற உறுப்பினர் வழங்கினார்.
பீளமேடு பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ், பகுதிகளில், தெருவிளக்கு இல்லை, இதனால் இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகின்றனர் எனவும், பயனீர் மில் சாலையில் உள்ள அங்கன்வாடி பள்ளியைச் சுற்றிலும் புதர் மண்டி, புழு பூச்சிகள் உள்ளன.
இவற்றை அப்புறப் படுத்த வேண்டும் என்றும், எல்லை தோட்டம் சாலையில், இஸ்லாமிய மக்கள் மசூதிக்கும், மயானத்திற்கும் செல்லும் வழியில், மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும் என்றும், சிஎம்சி காலனி பகுதியில், மின் மயானம், அருகில் உள்ள பொது கழிப்பிடத்தின் எண்ணிக்கை அதிகப்படுத்தி, மேற்கிந்திய முறையில், சரிபாதி வீதம் கட்டி தர வேண்டும் என்றும், பயனீர் மில் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில், வணிகவியல் ஆசிரியர் இதுவரை நியமிக்கவில்லை தற்காலிக ஆசிரியர் மட்டும் பணியாற்றி வருகின்றார் எனவே நிரந்தர ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும் என்றும், பல்வேறு கோரிக்கைகளை செய்துதர கோரி மனுக்கள் மேயரிடம் அளிக்கப்பட்டது.
கோவை மாநகராட்சி, 26-வது வார்டுக்குட்பட்ட பீளமேடு பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, அப்பகுதி 26-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரியைச் சந்தித்து பல்வேறு மனுக்களை வழங்கியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட மனுக்களை ஒரே தொகுப்பாகக் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் 26-வது வார்ரடு மாமன்ற உறுப்பினர் வழங்கினார்.
பீளமேடு பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ், பகுதிகளில், தெருவிளக்கு இல்லை, இதனால் இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகின்றனர் எனவும், பயனீர் மில் சாலையில் உள்ள அங்கன்வாடி பள்ளியைச் சுற்றிலும் புதர் மண்டி, புழு பூச்சிகள் உள்ளன.
இவற்றை அப்புறப் படுத்த வேண்டும் என்றும், எல்லை தோட்டம் சாலையில், இஸ்லாமிய மக்கள் மசூதிக்கும், மயானத்திற்கும் செல்லும் வழியில், மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும் என்றும், சிஎம்சி காலனி பகுதியில், மின் மயானம், அருகில் உள்ள பொது கழிப்பிடத்தின் எண்ணிக்கை அதிகப்படுத்தி, மேற்கிந்திய முறையில், சரிபாதி வீதம் கட்டி தர வேண்டும் என்றும், பயனீர் மில் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில், வணிகவியல் ஆசிரியர் இதுவரை நியமிக்கவில்லை தற்காலிக ஆசிரியர் மட்டும் பணியாற்றி வருகின்றார் எனவே நிரந்தர ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும் என்றும், பல்வேறு கோரிக்கைகளை செய்துதர கோரி மனுக்கள் மேயரிடம் அளிக்கப்பட்டது.