கோவை கிணத்துக்கடவு அருகே கோவில் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டிய சுவர் இடிப்பு - வருவாய்த் துறை அதிகாரிகள் நடவடிக்கை..!

கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவு எதிரே ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயிலின் பின்புறம் வசிக்கும் பழனிச்சாமி என்பவர் ஆக்கிரமித்துக் கட்டிய சுவர் இடிப்பு.


கோவை: கோவை கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டிய சுவரை இடித்து வருவாய்த் துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவு எதிரே ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோயிலின் பின்புறம் வசிக்கும் பழனிச்சாமி என்பவர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து சுவர் கட்டியுள்ளார்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கோவில் நிலத்தில் கட்டிய சுவரை அகற்றக்கோரி சொலவம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமாரிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையிட்டு நிலத்தை அளந்து பார்த்ததில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து சுவர் கட்டியது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, இன்று ஆக்கிரமித்துக் கட்டிய சுவரை கிணத்துக்கடவு வட்டாட்சியர் சசிரேகா முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் சுவர் இடித்து அகற்றப்பட்டது.



இதில் சொலவம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், மண்டல துணை வட்டாட்சியர் ராமராஜ், வருவாய் ஆய்வாளர் லலிதா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் என பலர் உடனிருந்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...