நரசீபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சார்பில் 84-லட்சம் செலவில் கட்டப்பட்ட 8-வகுப்பறைகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
கோவை: நரசீபுரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் தனியார் அமைப்பு சார்பில் கட்டப்பட்ட வகுப்பறைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
கோவை தொண்டாமுத்தூர் அடுத்த நரசீபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தனியார் அமைப்பு சார்பில் (ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர்) 84-லட்சம் செலவில் 8-வகுப்பறைகள்கட்டப்பட்டன. அந்த 8-வகுப்பறைகளையும் இன்றுமின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

இவ்விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சமீரன்பேசுகையில், முதல்வரின் நமக்கு நாமே திட்டத்திற்குக் கோவை மாவட்டமே எடுத்துக்காட்டாக இருக்கும். கோவை மாவட்டத்தில் தற்போது மூன்று கோடிக்கான பணிகளுக்கான அரசாணை பெற்றுள்ளது என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, இப்பள்ளி மாணவிகளிடத்தில் என்ன தேவை கேட்டபோது, கூடுதலாக பாடப்பிரிவுகள் தேவை எனகூறியதாகவும், விரைவில் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று கூடுதல் பாடப்பிரிவுகளைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும் இங்குகாலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களைநிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர் தொகை மூலம் மேலும் கட்டிடம் கட்டியவர்களுக்குப் பாராட்டுகள் என வாழ்த்துக் கூறினார். இந்நிகழ்வில் அப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


கோவை தொண்டாமுத்தூர் அடுத்த நரசீபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், தனியார் அமைப்பு சார்பில் (ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர்) 84-லட்சம் செலவில் 8-வகுப்பறைகள்கட்டப்பட்டன. அந்த 8-வகுப்பறைகளையும் இன்றுமின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சமீரன்பேசுகையில், முதல்வரின் நமக்கு நாமே திட்டத்திற்குக் கோவை மாவட்டமே எடுத்துக்காட்டாக இருக்கும். கோவை மாவட்டத்தில் தற்போது மூன்று கோடிக்கான பணிகளுக்கான அரசாணை பெற்றுள்ளது என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, இப்பள்ளி மாணவிகளிடத்தில் என்ன தேவை கேட்டபோது, கூடுதலாக பாடப்பிரிவுகள் தேவை எனகூறியதாகவும், விரைவில் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று கூடுதல் பாடப்பிரிவுகளைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும் இங்குகாலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களைநிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர் தொகை மூலம் மேலும் கட்டிடம் கட்டியவர்களுக்குப் பாராட்டுகள் என வாழ்த்துக் கூறினார். இந்நிகழ்வில் அப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.