வரி செலுத்தாதவர்களுக்கும், நீண்டநாள் நிலுவையில் வைத்திருப்பவர்களுக்கும் குடிநீர் துண்டிக்கப்பட்டு வருவதால், கடந்த மாதம் வரை 60-சதவீதத்திலிருந்து 80-சதவீதமாக உயர்ந்துள்ளது.
கோவை: கோவை மாநகராட்சியின் வரி வசூல் 60-சதவீதத்தில் இருந்து 80-சதவீதமாக உயர்ந்துள்ளது.
கோவை மாநகராட்சியில் வரி வசூலைத் தீவிரப்படுத்த மண்டலத்துக்கு 5-பேர் வீதம் 25-பேர் கொண்ட குழுவினர் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவர்கள் வருகின்ற 31-ஆம் தேதி வரை வரி வசூலிக்கும் பணியில் ஈடுப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கோவை மாநகராட்சியின் பிரதான வருவாய் குடிநீர் வரியிலிருந்தும் சொத்து வரியிலும் இருந்தே கிடைக்கின்றது. அதன் அடிப்படையில், நடப்பு ஆண்டின் நிதி ஆண்டு வருகிற 31-ஆம் தேதி முடியும் நிலையில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கையால் வரி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டு இருந்தது.
ஆகவே தற்போது அதனை விரைவுபடுத்தும் நோக்கில் தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரி செலுத்தாதவர்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் வரி செலுத்த நினைவு படுத்த படுகிறது.
மேலும் வரி செலுத்தாதவர்களுக்கும், நீண்டநாள் நிலுவையில் வைத்திருப்பவர்களுக்கும் குடிநீர் துண்டிக்கப்பட்டு வருகின்றது. இது போன்ற நடவடிக்கையால் கடந்த மாதம் வரை 60- சதவீதத்திலிருந்து 80-சதவீதமாக உயர்ந்துள்ளது.
நடப்பு நிதியாண்டு முடிவதற்கு 7-நாட்களே உள்ள நிலையில் வரி வசூலை அதிகரிக்கும் நோக்கில் மாநகராட்சியின் கீழ் பணிபுரியும் உதவியாளர், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர்கள் என 5-மண்டலங்களுக்கு 25-நபர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாநகராட்சியில் வரி வசூலைத் தீவிரப்படுத்த மண்டலத்துக்கு 5-பேர் வீதம் 25-பேர் கொண்ட குழுவினர் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவர்கள் வருகின்ற 31-ஆம் தேதி வரை வரி வசூலிக்கும் பணியில் ஈடுப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கோவை மாநகராட்சியின் பிரதான வருவாய் குடிநீர் வரியிலிருந்தும் சொத்து வரியிலும் இருந்தே கிடைக்கின்றது. அதன் அடிப்படையில், நடப்பு ஆண்டின் நிதி ஆண்டு வருகிற 31-ஆம் தேதி முடியும் நிலையில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கையால் வரி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டு இருந்தது.
ஆகவே தற்போது அதனை விரைவுபடுத்தும் நோக்கில் தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரி செலுத்தாதவர்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் வரி செலுத்த நினைவு படுத்த படுகிறது.
மேலும் வரி செலுத்தாதவர்களுக்கும், நீண்டநாள் நிலுவையில் வைத்திருப்பவர்களுக்கும் குடிநீர் துண்டிக்கப்பட்டு வருகின்றது. இது போன்ற நடவடிக்கையால் கடந்த மாதம் வரை 60- சதவீதத்திலிருந்து 80-சதவீதமாக உயர்ந்துள்ளது.
நடப்பு நிதியாண்டு முடிவதற்கு 7-நாட்களே உள்ள நிலையில் வரி வசூலை அதிகரிக்கும் நோக்கில் மாநகராட்சியின் கீழ் பணிபுரியும் உதவியாளர், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர்கள் என 5-மண்டலங்களுக்கு 25-நபர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.