கோவையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஊரக வளர்ச்சித் துறை சார்பில் பேரணி..!

மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்த இந்த பேரணியில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு நீர் சேமிப்பு தேவைகள் குறித்துத் தெரிவித்தனர்.


கோவை: கோவையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஊரக வளர்ச்சித் துறை சார்பில் பேரணி நடைபெற்றது.

உலக தண்ணீர் தினம் மார்ச் 22 அன்று கொண்டாடப்படுகிறது.



இந்நிலையில் அத்தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் மகளிர் திட்டம் சார்பில் இயற்கை வளம் காப்போம்! நீர்நிலைகளை பாதுகாப்போம்! என்ற தலைப்பில் பேரணி நடைபெறுகிறது.



இந்த பேரணியில் ஊரக வளர்ச்சி மகளிர் திட்டத்தின் பயிற்சி மாணவர்கள் மற்றும் மகளிர் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு "நீர் என்பது இயற்கை ஆதாரம் அல்ல அதுதான் வாழ்க்கை, நீரின்றி நீயும் இல்லை நானும் இல்லை, தண்ணீர் சேமிப்பு என்பது பூமியின் பாதுகாப்பு, இன்றைய நீர் சேமிப்பு நாளைய பாதுகாப்பு" ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.



இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் வழியாக ரேஸ்கோர்ஸ் பகுதியை சென்றடைந்தது.

இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.



அப்போது நீரைக்குறித்தும், நீர் சேமிப்பு தேவைகள் குறித்தும் மாணவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...