'எங்களுக்கு அடிப்படை வசதி வேணும்': 21-வார்டு மக்கள் கோவை மேயரிடம் கோரிக்கை மனு.!!

அங்கு வசித்து வரும் பொதுமக்கள், சாலை வசதி, சாக்கடை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் கோரி கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர்.



கோவை: கோவை மாநகராட்சி 21-வார்டுக்கு உட்பட்ட சரவணம்பட்டியில் உள்ள பாரதியார் வீதி, விநாயகபுரம் குடியிருப்போர் மக்கள் சார்பாக அடிப்படை வசதிகள் செய்யக்கோரி கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

கோவை மாநகராட்சி 21-வார்டுக்கு உட்பட்ட சரவணம்பட்டியில் உள்ள பாரதியார் வீதி, விநாயகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு வசித்து வரும் பொதுமக்கள், சாலை வசதி, சாக்கடை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் கோரி கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர்.

21-வார்டு கவுன்சிலர் பூங்கொடி சோமசுந்தரம், மற்றும் அவரது கணவர் சோமசுந்தரம் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் கையெழுத்திட்டு வழங்கப்பட்ட மனுவில், கோவை சரவணம்பட்டியில் உள்ள பாரதியார் வீதி, விநாயகபுரம், வார்டு எண்.21-ல் வசித்து வருகிறோம்.

இந்த பகுதியில் சாக்கடை வசதிகள் இல்லாத நிலையிலும், ரோடுகள் பழுதடைந்த நிலையிலும் மற்றும் தெருவிளக்குகள் மிகவும் குறைவாகவும் உள்ளது. கடந்த ஆட்சியில் பல வருடங்களாக யாரும் மேம்படுத்த முன்வரவில்லை.

இதனால் மக்கள் மழை காலத்தில் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அடிக்கடி சிறு சிறு விபத்துகள் நடக்கின்றன. ஆகையினால் மேற்படி சாக்கடை, ரோடு, சீரான குடிநீர் மற்றும் தெருவிளக்கு வசதிகளை மேம்படுத்தித் தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...