கோவை வன உயிரியல் பூங்கா அதே இடத்தில் செயல்படவும், சிதிலமடைந்த சாலைகள் விரைவில் சரி செய்யப்பட வேண்டும்: சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோரிக்கை.!!

கோவை வன உயிரியல் பூங்கா தற்போது உள்ள அதே இடத்தில் செயல்படவும், சிதிலமடைந்த சாலைகள் விரைவில் சரி செய்யப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர் கோரிக்கை விடுத்துள்ளது.


கோவை: கோவை வன உயிரியல் பூங்கா தற்போதுள்ள அதே இடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசுக்கு, சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர் நுகர்வோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

சிட்டிசன் வாய்ஸ் கோயமுத்தூர் அமைப்பின் தலைவர் சி.எம். ஜெயராமன் கூறியதாவது:-



தமிழக அரசு சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அருங்காட்சியகங்கள் புனரமைப்பு பணிக்கு 10-கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. கோவை மாவட்டத்தில் நகரின் மையப் பகுதியில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த வன உயிரியல் பூங்கா தற்பொழுது செயல்படாத நிலையில் உள்ளது.

இந்த வன உயிரியல் பூங்காவை இடமாற்றம் செய்வது வனவிலங்குகளை இங்கிருந்து சென்னைக்குக் கொண்டு செல்வது என்பது உள்ளிட்டவை அனைத்தையும் தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

கோவை மக்களின் முக்கிய பொழுது போக்கு அம்சமாக வன உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் குறைந்த செலவில் தங்களது குழந்தைகளுடன் பொழுதைக் கழிக்க ஏற்ற இடமாகத் திகழ்கிறது.

இந்த வன உயிரியல் பூங்காவை நகரின் வெளியே கொண்டு செல்வதால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும். பூங்கா செல்வதற்கு அதிக நேரம் மற்றும் நிதி சுமையை மக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அருங்காட்சியகங்கள் புனரமைக்கச் சிறப்பு நிதி ஒதுக்கி உள்ளதைப் போல கோவை வன உயிரியல் பூங்கா தற்போது உள்ள அதே இடத்தில் செயல்படச் சிறப்பு நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் சாலைகள் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன. கோவையில் சாலைப் பணிகளுக்குச் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை எங்கள் அமைப்பு வரவேற்கிறது.

இருப்பினும் மக்களின் நலன் கருதிப் புனரமைப்பு பணிகளைத் தரத்துடனும், துரிதமாகவும் செயல்படுத்தத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...