கோவை-ஷார்ஜா இடையே ஒரே நாளில் இரண்டு விமானங்கள் இயக்கம்: 600- பயணிகள், 7.5-டன் கார்கோ புக்கிங்.!!

இரண்டு விமானங்களிலும் சேர்த்து மொத்தம் 600-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் ஒரு விமானத்தில் 4.5-டன் மற்றொரு விமானத்தில் 3-டன் கார்கோ கையாளப்பட்டுள்ளன.


கோவை: கோவை-ஷார்ஜா இடையே ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் வாரத்தில் ஐந்து நாட்கள் தற்போது விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

அதிகாலை 3:30-மணிக்கு கோவை வந்தடைந்து மீண்டும் 4:30-மணிக்கு விமானம் புறப்பட்டு செல்லும். கடந்த ஐந்து நாட்களுக்கு முன் ஒரே நாளில் இரண்டு விமானங்கள் கோவைக்கு இயக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து ஏர்லைன்ஸ் வட்டாரங்கள் கூறியதாவது:-

கோவை -ஷார்ஜா இடையே கடந்த மார்ச் 18-ம் தேதி அதிகாலை இரண்டு விமானங்கள் இயக்கப்பட்டன. இரண்டு விமானங்களிலும் சேர்த்து மொத்தம் 600-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் ஒரு விமானத்தில் 4.5-டன் மற்றொரு விமானத்தில் 3-டன் கார்கோ கையாளப்பட்டுள்ளன.

ஒரு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு விமானங்கள் கோவை-ஷார்ஜா இடையே இயக்கப்பட்டன. எதிர்வரும் நாட்களிலும் இதேபோல் ஒரே நாளில் இரண்டு விமானங்கள் இயக்குவதற்கு வாய்ப்பு உள்ளது.

பயணிகள் மற்றும் கார்கோ புக்கிங் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதே இதற்குக் காரணமாகும்.

இவ்வாறு ஏர்லைன்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...