கோவை-ஷார்ஜா இடையே ஒரே நாளில் இரண்டு விமானங்கள் இயக்கம்: 600- பயணிகள், 7.5-டன் கார்கோ புக்கிங்.!!

இரண்டு விமானங்களிலும் சேர்த்து மொத்தம் 600-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் ஒரு விமானத்தில் 4.5-டன் மற்றொரு விமானத்தில் 3-டன் கார்கோ கையாளப்பட்டுள்ளன.


கோவை: கோவை-ஷார்ஜா இடையே ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் வாரத்தில் ஐந்து நாட்கள் தற்போது விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

அதிகாலை 3:30-மணிக்கு கோவை வந்தடைந்து மீண்டும் 4:30-மணிக்கு விமானம் புறப்பட்டு செல்லும். கடந்த ஐந்து நாட்களுக்கு முன் ஒரே நாளில் இரண்டு விமானங்கள் கோவைக்கு இயக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து ஏர்லைன்ஸ் வட்டாரங்கள் கூறியதாவது:-

கோவை -ஷார்ஜா இடையே கடந்த மார்ச் 18-ம் தேதி அதிகாலை இரண்டு விமானங்கள் இயக்கப்பட்டன. இரண்டு விமானங்களிலும் சேர்த்து மொத்தம் 600-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் ஒரு விமானத்தில் 4.5-டன் மற்றொரு விமானத்தில் 3-டன் கார்கோ கையாளப்பட்டுள்ளன.

ஒரு மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு விமானங்கள் கோவை-ஷார்ஜா இடையே இயக்கப்பட்டன. எதிர்வரும் நாட்களிலும் இதேபோல் ஒரே நாளில் இரண்டு விமானங்கள் இயக்குவதற்கு வாய்ப்பு உள்ளது.

பயணிகள் மற்றும் கார்கோ புக்கிங் நல்ல வரவேற்பு பெற்றுள்ளதே இதற்குக் காரணமாகும்.

இவ்வாறு ஏர்லைன்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...