பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடவடிக்கை துவங்க உள்ளோம். அதே போல, பாலியல் குற்றச்சம்பவங்கள் நடக்காமல் இருக்க, ஆண்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம் என தெரிவித்தார்.
கோவை: கோவை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக வி.பத்ரிநாராயணன் ஐ.பி.எஸ்இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர், டி.ஐ.ஜி முத்துச்சாமி, மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஆகியோரை சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளர் வி.பத்ரிநாராயணன் கூறியதாவது:-
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடவடிக்கை துவங்க உள்ளோம். அதே போல, பாலியல் குற்றச்சம்பவங்கள் நடக்காமல் இருக்க, ஆண்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.
முக்கியமாக, இளைஞர்களைப் பாதிக்கக்கூடிய கஞ்சா போன்ற போதைப் பொருட்களைத் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
மாவட்ட காவல் துறையில் ரோந்து பணிகள் போன்ற பழைய நடைமுறைகள் சிறப்பாக இருந்தால், அதைத் தொடர உள்ளதாகவும், தேவைப்பட்டால் மாற்றம் செய்ய உள்ளதாக, எஸ். பி. பத்ரிநாராயணன் தெரிவித்தார்.