2.5 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கோவை வருமான வரித்துறை உதவி ஆணையர், தனியார் ஆடிட்டர் கைது - சிபிஐ நடவடிக்கை

கோவையில் நில உரிமையாளரிடம், வருமான வரி செலுத்த, இரண்டரை லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை உதவி ஆணையர் மற்றும் தனியார் ஆடிட்டரை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர்.



கோவை: கோவையில் நில உரிமையாளரிடம், வருமான வரி செலுத்த, இரண்டரை லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை உதவி ஆணையர் மற்றும் தனியார் ஆடிட்டரை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர்.

கோவை பீளமேடு பகுதியில் வசித்து வரும் பாலதண்டபானி என்பவர் தனக்கு சொந்தமான ஆலாந்துறை பகுதியில் உள்ள விவசாய நிலத்தை கடந்த 2013ம் ஆண்டு விற்பனை செய்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம், இவரது வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது, விவசாய நிலம் விற்ற பணத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும், என ஆய்விற்கு சென்ற கோவை வருமான வரித்துறை உதவி ஆணையர் டேனியல் ராஜ் கூறியுள்ளார். 

மேலும், அவ்வாறு செலுத்தாமல் இருப்பதற்கு தனக்கு 5 லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என அவர் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர், இரு தரப்பும் பேசி, இரண்டரை லட்சம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்ட நிலையில், இது தொடர்பாக பாலதண்டபானி, சிபிஐ அதிகாரிகளிடம் புகாரளித்தார்.

இதையடுத்து, அவர்களது அறிவுறுத்தலின் பேரில் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வந்த பாலதண்டபானி, ரசாயனம் தடவிய 50 ஆயிரம் ரூபாயை ரொக்கமாகவும், 2 லட்சம் ரூபாய்க்கு ஒரு காசோலையையும் டேனியலிடம் வழங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த ஆய்வாளர் பாலாஜி தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். 

மேலும், இடைத்தரகராக செயல்பட்ட ஆடிட்டர், ஸ்ரீதரன் என்பவரையும் கைது செய்தனர். விசாரணையின் போது, டேனியல் தனக்கு உடல்நலக்குறைவு இருப்பதாக சொன்னதையடுத்து, அவரை கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பிற்காக சேர்த்தனர். பரிசோதனையில், அவருக்கு உடல்நலக்குறைவு இல்லை என்பது உறுதியானதையடுத்து, டேனியல் மற்றும் ஸ்ரீதரனை கோவை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...