கோவையில் திடீர் கோடை மழை; செட்டிபாளையம் அருகே 1500க்கும் மேற்பட்ட வாழைகள் சேதம்

கோவை மாவட்டம் செட்டிபாளையம் பேரூராட்சியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட வாழைகள் திடீர் சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் செட்டிபாளையம் பேரூராட்சியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட வாழைகள் திடீர் சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக, கோவை மாவட்டம் முழுவதும் இன்று மதியத்துக்கு மேல் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்தது.



அதன்படி, செட்டிபாளையம் பகுதியில் இன்று மதியம் பெய்த கனமழையுடன் பலத்த காற்று வீசியதால், பகுதியில் நடவு செய்யப்பட்டிருந்த வாழை மரங்கள் ஆயிரக்கணக்கில் சரிந்து சேதமாயின.



சுமார் 20 நிமிடம் பலத்த காற்றுடன் பெய்த மழையால் தங்களது வாழை மரங்கள் சாய்ந்து பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கவலை தெரிவிக்கின்றனர் அப்பகுதி விவசாயிகள். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து இழப்பீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...