கோவை வ.உ.சி. பூங்காவில் கோடை வெயிலை சமாளிக்க விலங்குகளுக்கு ஷவர் குளியல்..!

மேலும், பறவை மற்றும் விலங்குகளுக்கான உணவு முறையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோடை வெயிலை சமாளிக்க கோவை வ.உ.சி. பூங்காவில் விலங்குகளுக்கு, ஷவர் மூலம் நீர் தெளிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முன்பு, 'குளுகுளு' நகரம் என பெயர் பெற்றது கோவை. ஆனால், சாலை விரிவாக்கம், நகர்ப்புற மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன. இதனால் மழை குறைந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்தது.

கடந்த ஆண்டில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது. ஏப்ரல் முதல் வாரத்தில் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் அதிகமாக இல்லை. ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாத துவக்கத்தில் இருந்தே வெயிலின் அளவு, அதிகமாக காணப்படுகிறது.

இந்நிலையில், இனி ஏப்ரல் மற்றும் கத்திரி வெயில் காலத்தில் வெப்பத்தின் தாக்கம் இன்னும் கூடுதலாக இருக்கும். இதனால் மனிதர்கள் உட்பட பறவைகள், விலங்குகள் அனைத்தும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவில், வாத்து, புறா மற்றும் சாரஸ் கிரே, பெயிண்டர்ட் ஸ்டார்க், கிரே பெலிக்கன், ரோசி பெலிக்கன், ஈமு உள்ளிட்ட பறவைகள் உள்ளன.

இவை தவிர கடமான், குரங்குகள், ஒட்டகம் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளும், பாம்புகளும் உள்ளன. இப்பறவைகள், விலங்குகள் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றன.



பறவைகளுக்காக கடந்த சில நாட்களாக வாட்டர் ஸ்பிரேயர் மூலமாக குளியல் நடத்தப்படுகிறது. காலை அல்லது மதியம் என ஒரு வேளை மட்டும் வாத்துக்களுக்கு நீர் குளியல் நடக்கிறது.

கோடை வெயில் அதிகமானால், இரண்டு முறை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. பாம்புகளுக்கும் பெரிய அளவிலான டப் வைத்து அதில் நீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நீரில் பாம்புகள் வெயில் தாக்கத்தை தணித்துக் கொள்கின்றன. மேலும், பறவை, விலங்குகளுக்கான உணவு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காய்கறி, பழங்கள் பெறப்பட்டு வாத்து, மான், எலி, மயில் போன்றவற்றுக்கு அளிக்கப்படுகிறது. குரங்குகளுக்கு தர்பூசணி, ஐஸ்கிரீம் போன்றவை வழங்கப்படுகிறது.

கடமான்களுக்கு பிரத்யேகமாக ஸ்பிரேயர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்பிரேயர் மூலம் அவற்றுக்கு நீர் தெளிக்கப்படுகின்றன. இதன் மூலம் அவை வெப்பத்தைத் தணித்துக் கொள்கின்றன. வெயிலின் தாக்கம் குறையும் வரை இந்நடைமுறை பின்பற்றப்படும் என பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...