கோவையில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு..!

கோவை அவினாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.


கோவை: கோவையில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெறுகிறது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான உடற்தகுதி தேர்வு இன்றும், நாளையும் நடைபெறுகிறது.



தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவலர்கள் பணி நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2019ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வும், 2020ம் ஆண்டு 2ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வும் நடைபெற்றது. அந்த தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.

கொரோனா அச்சுறுத்தல், மருத்துவ காரணங்களால் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 215 பேர் உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்ள இயலாமல் போன நிலையில் விடுபட்டவர்களுக்கான உடற்தகுதி தேர்வு இன்று கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.ஆர்.எஸ்.மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டிஐஜி முத்துசாமி தலைமையில் இந்த உடற்தகுதி தேர்வு நடைபெறுகிறது.



இன்றும், நாளையும் நடைபெறும் இந்த உடற்தகுதி தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பு, மார்பளவு சரிபார்த்தல், உயரம் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகியவை நடைபெறுகின்றன.



Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...